என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்க திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன்
Byமாலை மலர்5 Nov 2019 2:43 AM GMT (Updated: 5 Nov 2019 2:43 AM GMT)
“மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டம் உள்ளது“ என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி :
இஸ்ரோ தலைவர் சிவன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
நெல்லை மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்தும மையத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பி செல்கிறேன்.
சந்திரயான்-2 செயற்கை கோளின் ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது. அதில் இருக்கும் பாகங்கள் நன்றாக செயல்பட்டு வருகிறது. அடுத்ததாக இந்த மாதத்தில் (நவம்பர்) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கை கோள் ஏவும் திட்டம் உள்ளது.
ககன்யான் திட்ட வேலைகள் நல்லபடியாக நடந்து வருகிறது. தற்போது ககன்யான் திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்வு நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் விண்வெளி வீரர்கள் பயிற்சிக்காக ரஷியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ககன்யான் திட்டத்தின் அடிப்படை வேலைகள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது செமி கிரையோஜெனிக், கிரையோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. வரும் காலங்களில் மின்சாரத்தில் இயங்கும் ராக்கெட் என்ஜின்கள் உள்பட பல புதிய ராக்கெட் என்ஜின்கள் வடிவமைக்கப்பட உள்ளன. மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டு வர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரோ தலைவர் சிவன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
நெல்லை மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்தும மையத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பி செல்கிறேன்.
சந்திரயான்-2 செயற்கை கோளின் ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது. அதில் இருக்கும் பாகங்கள் நன்றாக செயல்பட்டு வருகிறது. அடுத்ததாக இந்த மாதத்தில் (நவம்பர்) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கை கோள் ஏவும் திட்டம் உள்ளது.
ககன்யான் திட்ட வேலைகள் நல்லபடியாக நடந்து வருகிறது. தற்போது ககன்யான் திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்வு நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் விண்வெளி வீரர்கள் பயிற்சிக்காக ரஷியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ககன்யான் திட்டத்தின் அடிப்படை வேலைகள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது செமி கிரையோஜெனிக், கிரையோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. வரும் காலங்களில் மின்சாரத்தில் இயங்கும் ராக்கெட் என்ஜின்கள் உள்பட பல புதிய ராக்கெட் என்ஜின்கள் வடிவமைக்கப்பட உள்ளன. மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டு வர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X