search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்வெளி மையம்"

    • அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது
    • உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்.

    ஓசூர்:

    ஓசூர் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் கையறுகே நிலா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக அறிவியல் அறிஞர் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

    இந்த விழாவில் சிறகை விரி சிகரம் தொடு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதேபோல அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


    பூமியிலிருந்து 400 கி.மீ தூதரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுள் காலம் விரைவில் முடிவடைகிறது.

    அதனால் புதிதாக அமைக்க வேண்டிய சர்வதேச விண்வெளி மையத்தை நிலவில் ஆரம்பிப்போம் என நான் பல இடங்களில் கூறி வருகிறேன். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் நிலவுக்கு விரைவாகவும் சிக்கனமாக போக முடியும். அனைத்து நாடுகளும் இணைந்து இதனை செய்தால் சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். பூமிக்கு தேவையான எரிபொருட்களை அங்கிருந்து சிக்கனமாக கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், பூமியை துல்லியமாக அறிவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய திட்டம் நிசார் ஆகும், நாசா இஸ்ரோ சிந்தடிக் அப்பர்சர் ரேடார் என்று சொல்லக்கூடிய அதன் கடைசி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் மூலமாக பூமியில் இயற்கை வளங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலைகளை துல்லியமாக பார்ப்பதற்கான வாய்ப்பை இந்த கலன் உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். சந்திரன் 3 பிரக்யான் ரோவர் உயிர்ப்பித்தாலும் விக்ரம் லேண்டர் வழியாகத்தான் செய்தி பரிமாற்றத்தை கொடுக்க முடியும். பூமிக்கு இன்னும் புதிதாக செய்திகள் வரும் என்ற நம்பிக்கை இனிமேல் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது அங்கு உயிர்கள் உள்ளதா என ஆராய்ச்சியில் ஈடுபட்டால் சந்திராயன் 3ல் அனுப்பி உள்ள கலனில் இருந்து பூமியை நோக்கி அனுப்பும் சமிக்கைகள் மூலம் ஆராய்ச்சி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

    • 2 மாணவர்களுக்கான செலவை அகத்தியம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.
    • தனது சொந்த நிதியின் மூலம் ரூ.4 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

    பல்லாவரம்:

    ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட செல்லும் மாணவர்களுக்கு, பல்லாவரம் எம். எல். ஏ. இ.கருணாநிதி ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

    கொரோனா காலத்தில், முடங்கிக் கிடந்த அரசு பள்ளி மாணவர்களை, செறிவூட்டும் விதமாகவும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாகவும், 'ராக்கெட் சைன்ஸ்' என்ற தலைப்பில் ஆன்-லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு, ஜனவரி 26-ந்தேதி நடத்தப்பட்டது.

    விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை தலைமையில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள, 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் வாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், ஆன்-லைன் வகுப்பும் தொடர்ந்து கேள்வி நேரமும் நடத்தப்பட்டது.

    இதில் நிறைவாக 50 பேர் தமிழக அரசின் ஆதரவுடன் வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி ரஷ்ய நாட்டில் உள்ள யூரிக்காரின்' விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட செல்கிறார்கள்.

    இவர்களில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஜமீன் பல்லாவரம் மேல் நிலை பள்ளியை சேர்ந்த பிளஸ்- 2 மாணவர்ரோஹித், பிளஸ்-1 மாணவர் முகமதுசதிக், 10-ம் வகுப்பு மாணவர்கள், லத்தாஷா ராஜ் குமார், இலக்கியா, லித்திகா, ரக்க்ஷித் ஆகிய 6 மாணவர்களும் அடங்குவர்.

    ரஷ்யாவுக்கு செல்ல ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.2 லட்சம் செலவாகிறது. இதில் 2 மாணவர்களுக்கான செலவை அகத்தியம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது. ஒரு மாணவருக்கு தனியார் நிறுவனமும், ஒரு மாணவருக்கு தமிழ் ஆர்வலர்களும் நன்கொடை வழங்கி உள்ளனர்.

    இந்நிலையில் 2 மாணவர்களுக்கு பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தனது சொந்த நிதியின் மூலம் ரூ.4 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியில் பல்லாவரம் 2-வது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, அறிவியல் பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, மாமன்ற உறுப்பினர் கலைச் செல்வி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.
    • புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த விண்கலன்கள் எடுக்கும் வியப்பூட்டும் அரிய வகை புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

    தற்போது நியூ ஹரிசான்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படத்தை நாசா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதில் சூரியனை சுற்றி வரும் 9-வது பெரிய கோளான புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் மலைகள், பாறைகள், பள்ளத்தாக்கு, பள்ளங்கள் மற்றும் சமவெளி பகுதிகள் அமைந்து இருப்பது போன்று உள்ளது. புளூட்டோவின் மேற்பரப்பு பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனை பார்த்த இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் இந்த காட்சியை வியந்து பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் இது அற்புதமான புகைப்படம். இதை படம் எடுத்த நியூ ஹரிசான்ஸ் விண்கலத்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நீண்ட விடுப்பில் சென்ற சிந்தாமணி கடந்த 20-ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார்
    • உத்தரபிரதேசத்தை சேர்ந்த விகாசிங் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் மகாஸ்மந்த் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (வயது 29). விண்வெளி ஆராய்ச்சி மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    நீண்ட விடுப்பில் சென்ற சிந்தாமணி கடந்த 20-ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார். நேற்று பணியில் இருந்த அவர் இரவு 7.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு பேசினார்.

    பின்னர் அவரிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை பிரிவினர் சிந்தாமணி பணியில் இருந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள மரத்தில் சிந்தாமணி தூக்கில் தொங்கினார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிந்தாமணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விகாசிங் (வயது 30). இவர் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.

    விண்வெளி ஆராய்ச்சி மைய வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேற்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வேலை செய்து கொண்டு இருந்தார்.

    இன்று அதிகாலை பணி முடியும் நேரத்தில் விகாசிங் தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்து நெற்றி பொட்டில் வைத்து சுட்டார்.

    இதில் குண்டு பாய்ந்து தலையின் பின்பக்கம் வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து விகாசிங் பரிதாபமாக இறந்தார்.

    துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்த போலீசார் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணி சுமை காரணமாக 2 பாதுகாப்பு படை போலீசார் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலை இஸ்ரோ தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது. #ISRO #VikramSarabhai
    பெங்களூரு:

    குஜராத் மாநிலத்தில் பிறந்தவரான விக்ரம் சாராபாய் இங்கிலாந்தில் இயற்கை அறிவியலில் படித்து வந்த போது, இரண்டாம் உலகப்போர் மூண்டதால் நாடு திரும்பி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். 

    சி.வி.ராமனின் வழிகாட்டுதலில் காஸ்மிக் கதிர்களின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். போர் முடிந்ததும், இங்கிலாந்தில் படிப்பைத் தொடர்ந்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நாடு திரும்பினார்.

    இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை (INCOSPAR) தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக விக்ரம் சாராபாய் நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக ராக்கெட்டை வடிவமைத்து, அதைச் சோதிப்பதற்கான திட்டங்களை அவர் வகுத்தார்.

    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயின் 99-வது பிறந்த நாள் விழா பெங்களூரு இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    ×