search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவிஞர் வைரமுத்து
    X
    கவிஞர் வைரமுத்து

    நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்தி கண்ணீரோடு கைத்தட்டுகிறேன் - கவிஞர் வைரமுத்து

    ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த குழந்தையை மீட்க, நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்தி கண்ணீரோடு கைத்தட்டுகிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 65 மணி நேரமாக போராடி வரும் குழந்தையை மீட்க தற்போது அமைக்கப்பட்டு வரும் குழிக்குள் இறங்க வீரர்கள் கண்ணதாசன், மணிகண்டன், திலீப்குமார், அபிவாணன் உள்ளிட்டோர் தயாராகி வருகின்றனர்.

    ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள 2 வயது குழந்தையை மீட்க 6 தீயணைப்பு படை வீரர்கள் தயாராகி வரும் நிலையில், குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க, நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்தி கண்ணீரோடு கைத்தட்டுகிறேன் என கவிஞர் வைரமுத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சுர்ஜித் மீட்பு பணியை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கவனித்து வரும் நிலையில் ஆங்காங்கே பிரார்த்தனைகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×