என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் ஆள் மாறாட்ட வழக்கு - சென்னை டாக்டருக்கு காவல் நீட்டிப்பு
Byமாலை மலர்25 Oct 2019 9:04 AM GMT (Updated: 25 Oct 2019 9:04 AM GMT)
நீட் ஆள் மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு நவம்பர் 7-ந் தேதி வரை காவல் நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி:
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து கைதான உதித் சூர்யாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கியது. ஆனால் இவரது தந்தை டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் வெங்கடேசன் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் டாக்டர் வெங்கடேசனின் நீதிமன்ற காவலை நவம்பர் 7-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் இதுவரை ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் உதித்சூர்யாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களான பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், இர்பான், அவரது சந்தை முகமது ஷபி, பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதைதொடர்ந்து இவர்கள் 8 பேரும் தேனி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கி மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து கைதான உதித் சூர்யாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கியது. ஆனால் இவரது தந்தை டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் வெங்கடேசன் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் டாக்டர் வெங்கடேசனின் நீதிமன்ற காவலை நவம்பர் 7-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் இதுவரை ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் உதித்சூர்யாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களான பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், இர்பான், அவரது சந்தை முகமது ஷபி, பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதைதொடர்ந்து இவர்கள் 8 பேரும் தேனி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கி மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X