என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானல் நகரப்பகுதியில் புகுந்த காட்டெருமைகள் - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
Byமாலை மலர்23 Oct 2019 5:46 AM GMT (Updated: 23 Oct 2019 5:46 AM GMT)
கொடைக்கானல் நகருக்குள் புகும் காட்டெருமைகளை முழுமையாக வனப்பகுதியிலிருந்து வெளியில் வரவிடாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொடைக்கானல்:
சுற்றுலா தலமான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கொடைக்கானல் பகுதியில் அடிக்கடி காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். இந்த நிலையில் மழை காரணமாக கடந்த சிலநாட்களாக காட்டெருமைகள் நகருக்குள் வருவது குறைந்திருந்தது.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அன்றாடம் பெய்துவந்த மழையும் காணாமல் போனது. மழை குறைந்ததால் மீண்டும் மாலை நேரங்களில் காட்டெருமைகள் நகருக்குள் புகுந்தன. பேருந்து நிலையப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டெருமைகள் தனது குட்டியுடன் ஏழுரோடு பகுதியில் வலம் வந்தன.
இதனால் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிலர் காட்டெருமைகளை தங்கள் மொபைலில் படமெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இருப்பினும் வனத்துறையினர் இதுபோல் நகருக்குள் புகும் காட்டெருமைகளை முழுமையாக வனப்பகுதியிலிருந்து வெளியில் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுற்றுலா தலமான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கொடைக்கானல் பகுதியில் அடிக்கடி காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். இந்த நிலையில் மழை காரணமாக கடந்த சிலநாட்களாக காட்டெருமைகள் நகருக்குள் வருவது குறைந்திருந்தது.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அன்றாடம் பெய்துவந்த மழையும் காணாமல் போனது. மழை குறைந்ததால் மீண்டும் மாலை நேரங்களில் காட்டெருமைகள் நகருக்குள் புகுந்தன. பேருந்து நிலையப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டெருமைகள் தனது குட்டியுடன் ஏழுரோடு பகுதியில் வலம் வந்தன.
இதனால் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிலர் காட்டெருமைகளை தங்கள் மொபைலில் படமெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இருப்பினும் வனத்துறையினர் இதுபோல் நகருக்குள் புகும் காட்டெருமைகளை முழுமையாக வனப்பகுதியிலிருந்து வெளியில் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X