search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild Buffalo"

    • திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிலும் சிறுமலை தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மலைகளும், குன்றுகளும் உள்ளது.
    • காட்டெருமைகள் தண்ணீர் பருகுவதற்கு ஆங்காங்கே மலைகளை சுற்றி குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அழகர் மலை, கரந்த மலை, சிறுமலை தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மலைகளும், குன்றுகளும் உள்ளது.

    இந்த மலைகளை சுற்றி மூங்கில்பட்டி, பட்டணம் பட்டி, காசம்பட்டி, வத்திபட்டி, லிங்கவாடி, வேம்பரளி, மலையூர், முளையூர், உலுப்பகுடி, குட்டுப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மாமரங்கள், சோளம், கம்பு, நிலக்கடலை, பயறு வகைகள் ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மலைகளில் இருந்து ஆங்காங்கே காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக மலை இறங்கி வருகிறது.

    குட்டுப்பட்டி பகுதியில் இறங்கிய 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகளையும், மர வகைகளை ஒடித்து சேதப்படுத்தியது. கூட்டம் கூட்டமாக வரும் காட்டெருமைகளை விவசாயிகள் விரட்ட முடியாமல் பரிதவிக்கின்றனர். இது குறித்து குட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி பழனியப்பன் (45) தெரிவிக்கையில், வருடந்தோறும் காட்டெருமைகள் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது.இதற்கு வனத்துறை நிர்வாகம் தான் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தடுப்பு வேலிகளும் அமைக்க வேண்டும்.இது தவிர காட்டெருமைகள் தண்ணீர் பருகுவதற்கு ஆங்காங்கே மலைகளை சுற்றி குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இரவு நேரத்தில் விவசாயிகள் காவலுக்கு கூட போக முடியவில்லை. அச்சத்துடன் இருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார்.

    தாயை பிரிந்த குட்டியானைக்கு, காட்டெருமை நண்பனாக கிடைத்துள்ளது. அவற்றை பிரிக்க முயன்ற வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
    குன்னூர்:

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் இருக்கின்றன. தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

    இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பலாப்பழ சீசன் காலமாக இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பலாப்பழங்களை தின்பதற்கு சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வருவது வழக்கம். அதன்படி கடந்த சீசனில் சமவெளி பகுதியில் இருந்து வந்த காட்டுயானைகள் கூட்டத்தில் இருந்து 5 வயதுடைய குட்டியானை ஒன்று பிரிந்தது.
    இந்த குட்டியானை பர்லியார், கே.என்.ஆர். நகர், மரப்பாலம், காட்டேரி நஞ்சப்ப சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இதனை குன்னூர் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நஞ்சப்ப சத்திர வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டெருமையுடன், அந்த குட்டியானை நட்புடன் பழகியது. தற்போது காட்டெருமையும், குட்டியானையும் நண்பர்களாக இணைந்தே சுற்றித்திரிகின்றன. இதற்கிடையில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி அறிவுரையின்பேரில் வன ஊழியர்களும், வேட்டைத்தடுப்பு காவலர்களும் குட்டியானையையும், காட்டெருமையையும் பிரிக்க போராடி வருகின்றனர். ஆனால் அது நடந்தபாடில்லை. மாறாக பிரிக்க முயற்சிக்கும்போது 2 வனவிலங்குகளும் ஆக்ரோஷம் அடைந்து விடுகின்றன. நேற்று முன்தினம் மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே காட்டெருமையும், குட்டியானையும் இணைந்து வந்தபோது வனத்துறையினர் அவற்றை பிரிக்க முயற்சித்தனர். ஆனால் அவை வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

    தொடர்ந்து அவைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தாயை பிரிந்த குட்டியானையையும், அதை தாய் போல பாதுகாத்து செல்லும் காட்டெருமையையும் காணும்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த 2 வனவிலங்குகளையும் பிரிக்க வனத்துறையினர் போராடி வருவதாக தெரிகிறது. யாருக்கும் ஆபத்து ஏற்படாத பட்சத்தில், அவற்றை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது. காலப்போக்கில் அவை பிரிந்து செல்வது நடக்கக்கூடிய ஒன்று தான்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
    ×