என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பலமாகவும், திமுகவுக்கு பாடமாகவும் அமையும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Byமாலை மலர்19 Oct 2019 4:38 AM GMT (Updated: 19 Oct 2019 4:38 AM GMT)
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு பாடமாகவும், அ.தி.மு.க.விற்கு பலமாகவும் அமையும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
களக்காடு:
களக்காடு ஒன்றியம் கருவேலங்குளம் கிராமத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அமையும். இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு பாடமாகவும், அ.தி.மு.க.விற்கு பலமாகவும் அமையும். ஜெயலலிதாவின் திட்டங்கனை நிறைவேற்றும் நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமி அரசு செய்து வருகின்றது.
இந்த அரசு மீது ஸ்டாலின் கூறும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. ஸ்டாலின் அடிக்கடி சொல்கின்ற ஒரு வார்த்தை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர்கள் ஊழல் செய்கின்றனர் என்று கூறி வருகின்றார். எங்களை பார்த்து ஒருவிரலை நீட்டி பேசும் ஸ்டாலின் அவரது பக்கம் நான்கு விரல் திரும்பி நிற்கின்றது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் சொல்வதில் எந்த லாஜிக்கும் கிடையாது. தமிழக முதல்வர் மத்திய அரசின் அனுமதி பெற்று வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். வெளிநாடு பயணம் குறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு ஸ்டாலின் பேசி வருவது கண்டிக்கதக்கது. அமைச்சர்கள் பற்றி சீமான் பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.
முதலில் ஏதாவது ஒரு கவுன்சிலர் தேர்தலில் நின்று சீமான் ஜெயிக்கட்டும். பிறகு அமைச்சர்கள் பற்றி விமர்சனம் செய்ய சொல்லுங்கள். ஜெயலலிதா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் மரணத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கின்றார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
களக்காடு ஒன்றியம் கருவேலங்குளம் கிராமத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அமையும். இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு பாடமாகவும், அ.தி.மு.க.விற்கு பலமாகவும் அமையும். ஜெயலலிதாவின் திட்டங்கனை நிறைவேற்றும் நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமி அரசு செய்து வருகின்றது.
இந்த அரசு மீது ஸ்டாலின் கூறும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. ஸ்டாலின் அடிக்கடி சொல்கின்ற ஒரு வார்த்தை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர்கள் ஊழல் செய்கின்றனர் என்று கூறி வருகின்றார். எங்களை பார்த்து ஒருவிரலை நீட்டி பேசும் ஸ்டாலின் அவரது பக்கம் நான்கு விரல் திரும்பி நிற்கின்றது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் சொல்வதில் எந்த லாஜிக்கும் கிடையாது. தமிழக முதல்வர் மத்திய அரசின் அனுமதி பெற்று வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். வெளிநாடு பயணம் குறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு ஸ்டாலின் பேசி வருவது கண்டிக்கதக்கது. அமைச்சர்கள் பற்றி சீமான் பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.
முதலில் ஏதாவது ஒரு கவுன்சிலர் தேர்தலில் நின்று சீமான் ஜெயிக்கட்டும். பிறகு அமைச்சர்கள் பற்றி விமர்சனம் செய்ய சொல்லுங்கள். ஜெயலலிதா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் மரணத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கின்றார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X