என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - அமைச்சர் சி.வி.சண்முகம் அண்ணன் போட்டியா?
Byமாலை மலர்23 Sep 2019 7:02 AM GMT (Updated: 23 Sep 2019 7:24 AM GMT)
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என்று தெரிய வந்துள்ளது.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு அக்டோபர் மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வினர் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் போட்டி போட்டு விருப்ப மனு வழங்கி வருகிறார்கள்.
கடந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் 41,428 வாக்குகள் பெற்றிருந்தார்.
பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் எப்படியும் இந்த தொகுதியை தங்கள் வசம் ஆக்கி விடலாம் என்று அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டியுள்ளனர். எனவே ஏராளமானோர் போட்டி போட்டு விருப்பமனு கொடுத்து வருகிறார்கள்.
இன்று மாலை 3.30 மணி வரை விருப்ப மனு பெறப்படும். அதன் பின்னர் மனு அளித்தவர்களிடம் கட்சி தலைமை நேர்காணல் நடத்த உள்ளது.
நேர்காணல் முடிந்ததும் இன்றே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு அக்டோபர் மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வினர் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் போட்டி போட்டு விருப்ப மனு வழங்கி வருகிறார்கள்.
முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வக்கீல் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.
கடந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் 41,428 வாக்குகள் பெற்றிருந்தார்.
பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் எப்படியும் இந்த தொகுதியை தங்கள் வசம் ஆக்கி விடலாம் என்று அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டியுள்ளனர். எனவே ஏராளமானோர் போட்டி போட்டு விருப்பமனு கொடுத்து வருகிறார்கள்.
இன்று மாலை 3.30 மணி வரை விருப்ப மனு பெறப்படும். அதன் பின்னர் மனு அளித்தவர்களிடம் கட்சி தலைமை நேர்காணல் நடத்த உள்ளது.
நேர்காணல் முடிந்ததும் இன்றே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X