search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் தொல்லை கொடுத்த சங்கர்.
    X
    பாலியல் தொல்லை கொடுத்த சங்கர்.

    கொடைக்கானலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

    கொடைக்கானலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை பொதுமக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகில் உள்ள மேல்புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது59). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களிடம் தவறான முறையில் நடக்க முயன்று வந்துள்ளார்.

    பெண்கள் கழிப்பிடம் செல்லும்போது கதவை திறந்து உள்ளே செல்வதும் அவர்கள் சத்தம் போட்டவுடன் தெரியாமல் வந்து விட்டேன் என கூறி தப்பித்து விடுவதும் இவரது பழக்கம். இதேபோல அதிகாலையில் வேலைக்கு செல்லும் பெண்களை தனது ஆசைக்கு இனங்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    அதன்படி காலையில் விறகு எடுக்க சென்ற 42 வயது பெண்ணிடம் பேசியவாறு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறினார். இதனையடுத்து அவரது கணவர் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் சங்கரை பிடித்து மின் கம்பத்தில் கட்டிவைத்தனர்.

    பின்னர் பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சங்கரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் சங்கர் பல ஆண்டுகளாகவே இதேபோல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இவரது நடவடிக்கை பிடிக்காததால் அவரது மனைவியும், மகன்களும் பிரிந்து சென்று விட்டனர். அதன்பிறகு கொடைக்கானலில் போதை காளான்கள் விற்று போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என தெரிய வந்தது. 

    Next Story
    ×