search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

    கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கொடைக்கானல்

    கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா (வயது45). இவர் நாயுடுபுரத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று தனது குடும்பத்தினருடன் வத்தலக்குண்டுவில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். வேனில் ரகமத்துல்லா உள்பட 6 பேர் வந்தனர். இரவு கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை இடித்து 100 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் வேனுக்குள் இருந்தவர்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் இடித்து அலறி துடித்தனர்.

    இதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கிய ரகமத்துல்லா, சாதிக் (41), சர்மிளா (35), மெகரூன்நிஷா (41), ரூபிதா ஷெரின் (18), ஆசிக் பரீத் (13) ஆகியோரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதில் ரூபிதா ஷெரின், ஆசிக் பரீத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதில் ரூபிதாஷெரின் கல்லூரியில் முதலாம் ஆண்டும், ஆசிக்பரீத் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொடைக்கானல் மற்றும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×