search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

    பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம். தவுட்டுப்பாளையம் அருகே மோதுகாடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி சரண்யா(வயது 26). இவர் பரமத்தி வேலூர் பகுதியிலுள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.  

    இந்நிலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (34) சரண்யாவை பார்த்து நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறி திடீரென சரண்யாவை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.   

    சரண்யா சத்தம் பேடவே பயந்து போன மோகன்ராஜ்  இது பற்றி வெளியில் கூறினால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சரண்யா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார்.  

    புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×