என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு
Byமாலை மலர்15 Aug 2019 6:36 AM GMT (Updated: 15 Aug 2019 6:36 AM GMT)
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.28,944-க்கும் விற்பனையானது.
சென்னை:
ஆபரண தங்கம் விலை கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. அன்று ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 480 ஆக இருந்தது. அதையடுத்து நாள்தோறும் விலை அதிகரித்தது.
உச்சகட்டமாக நேற்று முன்தினம் (13-ந்தேதி) பவுன் ரூ.29 ஆயிரத்து 16-க்கு விற்றது. 12 நாட்களில் பவுனுக்கு ரூ.2536 அதிகரித்து இருந்தது.
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாகவும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பாலும் இந்த விலை உயர்வு இருந்தது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவும் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
13 நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலையில் நேற்று சரிவு ஏற்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.392 குறைந்து இருந்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் அதிகரித்தது.
இன்று காலை கிராம் ரூ.3618-க்கும், பவுன் ரூ.28,944-க்கும் விற்பனையானது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்ட இருக்கிறது.
இதேபோல வெள்ளி விலையிலும் உயர்வு காணப்பட்டது. ஒரு கிராம் ரூ 48.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.48,700 ஆகவும் இருந்தது.
ஆபரண தங்கம் விலை கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. அன்று ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 480 ஆக இருந்தது. அதையடுத்து நாள்தோறும் விலை அதிகரித்தது.
உச்சகட்டமாக நேற்று முன்தினம் (13-ந்தேதி) பவுன் ரூ.29 ஆயிரத்து 16-க்கு விற்றது. 12 நாட்களில் பவுனுக்கு ரூ.2536 அதிகரித்து இருந்தது.
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாகவும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பாலும் இந்த விலை உயர்வு இருந்தது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவும் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
13 நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலையில் நேற்று சரிவு ஏற்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.392 குறைந்து இருந்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் அதிகரித்தது.
இன்று காலை கிராம் ரூ.3618-க்கும், பவுன் ரூ.28,944-க்கும் விற்பனையானது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்ட இருக்கிறது.
இதேபோல வெள்ளி விலையிலும் உயர்வு காணப்பட்டது. ஒரு கிராம் ரூ 48.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.48,700 ஆகவும் இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X