என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கபினி அணையில் இன்று 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
மேட்டூர்:
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்தது. இதனால் அந்த அணை வேகமாக நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அணையில் இருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
வயநாடு பகுதியில் மழை குறைந்ததால் கபினி அணைக்கு வரும் நீர்வரத்து அடியோடு சரிந்தது. நேற்று இரவு முதல் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் கபினியில் இருந்து காவிரியில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மற்றொரு அணையான கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 1 லட்சத்து 51ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்