என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் குடும்ப தகராறில் அண்ணனை குத்திக் கொன்ற தம்பி
Byமாலை மலர்7 Aug 2019 9:58 AM GMT (Updated: 7 Aug 2019 9:58 AM GMT)
திண்டுக்கல்லில் குடும்ப தகராறில் அண்ணணை தம்பியே குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரவேல்ராஜா (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் இஸ்ரவேல்ராஜா திருச்சியில் தங்கி சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
தற்போது முத்தழகுப்பட்டி செபஸ்தியார் கோவில் திருவிழா நடந்து வருவதால் அதற்காக நேற்று குடும்பத்துடன் ஊருக்கு வந்தார். முத்தகுப்பட்டியில் அவரது தம்பி விஜி என்ற சிங்கராயன் (35). குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவருடன் தாயாரும் வசித்து வருகிறார். திருவிழவுக்கு வந்த சமயத்தில் இஸ்ரவேல் ராஜாவுக்கும் சிங்கராயனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்களது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இன்று காலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு மூண்டது. இதில் ஆத்திரமடைந்த சிங்கராயன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் என்றும் பாராமல் இஸ்ரவேல் ராஜாவை பல இடங்களில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இஸ்ரவேல்ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவுக்கு வந்த சமயத்தில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர்.
திண்டுக்கல் முத்தழகுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரவேல்ராஜா (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் இஸ்ரவேல்ராஜா திருச்சியில் தங்கி சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
தற்போது முத்தழகுப்பட்டி செபஸ்தியார் கோவில் திருவிழா நடந்து வருவதால் அதற்காக நேற்று குடும்பத்துடன் ஊருக்கு வந்தார். முத்தகுப்பட்டியில் அவரது தம்பி விஜி என்ற சிங்கராயன் (35). குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவருடன் தாயாரும் வசித்து வருகிறார். திருவிழவுக்கு வந்த சமயத்தில் இஸ்ரவேல் ராஜாவுக்கும் சிங்கராயனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்களது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இன்று காலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு மூண்டது. இதில் ஆத்திரமடைந்த சிங்கராயன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் என்றும் பாராமல் இஸ்ரவேல் ராஜாவை பல இடங்களில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இஸ்ரவேல்ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவுக்கு வந்த சமயத்தில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X