search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணன் கொலை"

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் அன்பு ஊருக்கு வந்தார்.
    • ஆத்திரமடைந்த தம்பி அன்பு கத்தியால் தனது அண்ணன் சிவன் காளையை குத்தினார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் பிரதான சாலையைச் சேர்ந்த அன்னக்கொடி மனைவி விஜயா. இவர்களுக்கு சிவன் காளை (வயது 32), அன்பு (28) என்ற 2 மகன்களும், கனி (25) என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். சகோதரர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. சிவன் காளை உள்ளூரிலேயே கூலி வேலை பார்த்து வந்தார். அன்பு கோவையில் இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் அன்பு ஊருக்கு வந்தார். நேற்று தனது தாய் விஜயாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். இதனை சிவன் காளை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி அன்பு கத்தியால் தனது அண்ணன் சிவன் காளையை குத்தினார். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணனை குத்திக்கொன்ற அன்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×