search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    சசிகலாவை வெளியே கொண்டு வர சட்டரீதியான முயற்சிகள்- டிடிவி தினகரன்

    சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வந்தார். அங்கு ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். இன்று காலை அவரது முன்னிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.

    பின்னர் தினகரன் பெங்களூரு புறப்பட்டு சென்றார். இன்று பிற்பகலில் சசிகலாவை சந்தித்து பேசிய தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா

    சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். சட்டசபையில் வாக்குவாதம் நடந்தால் சபையை ஒத்திவைக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×