என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட் உத்தரவு
Byமாலை மலர்9 July 2019 7:26 AM GMT (Updated: 9 July 2019 7:26 AM GMT)
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலன் மாயமானது விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி போராட்டம் நடத்தினார்.
பின்னர் ஏப்ரல் மாதம் காவிரி பிரச்சனைக்காக போராட்டம் நடத்தினார். மே மாதம் இலங்கை தமிழர்கள் படுகொலை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார்.
இதுபோல பல்வேறு காரணங்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார். அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் திருமுருகன் காந்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆனந்த வெங்கடேஷ், மனுதாரர் மீதான வழக்குகளை எல்லாம் ரத்து செய்ய முடியாது. அனைத்து வழக்குகளையும் அவர் எதிர் கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலன் மாயமானது விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி போராட்டம் நடத்தினார்.
பின்னர் ஏப்ரல் மாதம் காவிரி பிரச்சனைக்காக போராட்டம் நடத்தினார். மே மாதம் இலங்கை தமிழர்கள் படுகொலை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார்.
இதுபோல பல்வேறு காரணங்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார். அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் திருமுருகன் காந்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆனந்த வெங்கடேஷ், மனுதாரர் மீதான வழக்குகளை எல்லாம் ரத்து செய்ய முடியாது. அனைத்து வழக்குகளையும் அவர் எதிர் கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X