search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.
    X
    காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.

    திருமங்கலம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது குருவாயூர். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் போதுமான தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

    3 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னம்பட்டி கிராமத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த குருவாயூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்சையும் சிறைபிடித்தனர்.

    தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் விரைந்து வந்து குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
    Next Story
    ×