என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்
Byமாலை மலர்19 Jun 2019 5:30 AM GMT (Updated: 19 Jun 2019 5:30 AM GMT)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது குருவாயூர். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் போதுமான தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
3 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னம்பட்டி கிராமத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த குருவாயூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்சையும் சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் விரைந்து வந்து குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது குருவாயூர். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் போதுமான தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
3 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னம்பட்டி கிராமத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த குருவாயூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்சையும் சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் விரைந்து வந்து குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X