search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆனைமலை அருகே மாடுகள் இறந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    ஆனைமலை அருகே மாடுகள் இறந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    ஆனைமலை அருகே செல்லமாக வளர்த்த மாடுகள் இறந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 33). இவர் தனது வீட்டில் செல்லமாக 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார்.

    கடந்த மாதம் 2 மாடுகளும் திடீரென இறந்தது. தான் செல்லமாக வளர்த்த மாடுகள் இறந்ததால் ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஜெயலட்சுமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×