என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கணவர் இறந்ததால் வாலிபருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அருகே உள்ள வெற்றிலை காளிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கல்பனா (வயது 28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்தநிலையில் கடந்த 1 வருடத்துக்கு முன்பு மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் கல்பனா விஜய் செல்வம் என்ற வாலிபருடன் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தார்.
கடந்த 1 வாரத்துக்கு முன்பு விஜய் செல்வம் தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கிள் கலந்து கொள்ள செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு கல்பனா தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கல்பனா வாழ்க்கையில் விரக்தி அடைந்து துப்பட்டாவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கல்பனாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்