search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் - தங்கதமிழ்செல்வன்
    X

    அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் - தங்கதமிழ்செல்வன்

    வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதால் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #ThangaTamilSelvan #Vijayabaskar #CBIRaid
    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்செல்வன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்க தயாராக உள்ளோம். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ வரும் என நினைக்கவில்லை. உண்மையின் பக்கமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.



    அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகள் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றிருப்பது தமிழகத்திற்கு தலைக்குனிவான செயலாகும்.

    ரெயில் விபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு ஏற்று அந்த துறையின் அமைச்சர் ராஜினாமா செய்வது வழக்கம்.

    அதே போல் ரூ. 40 கோடி லஞ்சம் பெற்றதாக ஊழல் புகார் கூறப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும். தன் மீதான வழக்கை சட்டப்படியாக சந்தித்து கோர்ட்டில் நிரபராதி என நிரூபித்து மீண்டும் அவர் அமைச்சர் பதவி ஏற்கலாம். இது தான் நடைமுறை.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #Vijayabaskar #CBIRaid

    Next Story
    ×