என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூர் போலீசில் ரஜினிகாந்த் மீது புகார்
Byமாலை மலர்16 Jun 2018 8:56 AM GMT (Updated: 16 Jun 2018 8:56 AM GMT)
தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓசூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூசை அடுத்த சென்னத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி உயிர் தியாகம் செய்து போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 13 பேர் பற்றி எதிர்மறையான கருத்தை தெரிவித்து உள்ளார்.
போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டு உள்ளார். பொய்யான கருத்தை அவர் மக்களிடம் பரப்பி உள்ளார்.
போராடினால் உயிர் பலி ஆகிவிடும் என்பது போன்ற கருத்தை அவர் மக்களிடம் உருவாக்கி உள்ளார். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார்.
தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் அவர் கூறி இருக்கிறார். மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறி உள்ளார்.
அவர் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட ஓசூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்து உள்ளார்.
இந்த புகார் மனு குறித்து அரசு வக்கீலுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூசை அடுத்த சென்னத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி உயிர் தியாகம் செய்து போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 13 பேர் பற்றி எதிர்மறையான கருத்தை தெரிவித்து உள்ளார்.
போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டு உள்ளார். பொய்யான கருத்தை அவர் மக்களிடம் பரப்பி உள்ளார்.
போராடினால் உயிர் பலி ஆகிவிடும் என்பது போன்ற கருத்தை அவர் மக்களிடம் உருவாக்கி உள்ளார். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார்.
தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் அவர் கூறி இருக்கிறார். மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறி உள்ளார்.
அவர் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட ஓசூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்து உள்ளார்.
இந்த புகார் மனு குறித்து அரசு வக்கீலுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X