என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை நகைப்பட்டறையில் மதுவில் சயனைடு கலந்து அண்ணன்-தம்பி தற்கொலை
Byமாலை மலர்31 May 2018 11:20 AM GMT (Updated: 31 May 2018 11:20 AM GMT)
கோவை நகைப்பட்டறையில் மதுவில் சயனைடு கலந்து அண்ணன், தம்பி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பால்ராஜ்(35).கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவரது தம்பி விஜயராஜ்(32). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெரியகடைவீதியில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். பால்ராஜ்க்கு மது பழக்கம் இருந்ததால் அவரது தம்பி விஜயராஜ் அண்ணன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
நேற்று இரவு விஜயராஜ் வேலைபார்க்கும் நகைப்பட்டறைக்கு அவரது அண்ணன் பால்ராஜ் வந்தார். இரவில் அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை நகைப்பட்டறை திறந்து கிடந்த நிலையில் பால்ராஜ் அவரது தம்பி விஜயராஜ் ஆகியோர் பிணமாக கிடப்பதாக பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த அவர்கள் அருகில் மதுபாட்டிலும் சயனைடும் கிடந்தது. விசாரணையில் அவர்கள் மதுவில் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சயனைடு குடித்து இறந்ததால் அவர்களது உடல் நீல நிறத்தில் காணப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மனவேதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. #Tamilnews
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பால்ராஜ்(35).கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவரது தம்பி விஜயராஜ்(32). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெரியகடைவீதியில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். பால்ராஜ்க்கு மது பழக்கம் இருந்ததால் அவரது தம்பி விஜயராஜ் அண்ணன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
நேற்று இரவு விஜயராஜ் வேலைபார்க்கும் நகைப்பட்டறைக்கு அவரது அண்ணன் பால்ராஜ் வந்தார். இரவில் அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை நகைப்பட்டறை திறந்து கிடந்த நிலையில் பால்ராஜ் அவரது தம்பி விஜயராஜ் ஆகியோர் பிணமாக கிடப்பதாக பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த அவர்கள் அருகில் மதுபாட்டிலும் சயனைடும் கிடந்தது. விசாரணையில் அவர்கள் மதுவில் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சயனைடு குடித்து இறந்ததால் அவர்களது உடல் நீல நிறத்தில் காணப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மனவேதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X