search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு
    X

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh
    புதுச்சேரி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் புதுச்சேரியிலும் முழு அடைப்பு  போராட்டம் நடைபெற்று வருகிறது.



    முழு அடைப்பு போராட்டத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளதால், பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.  #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh
    Next Story
    ×