என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இங்கிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.
    • இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணி கேப்டன் சுப்டன் கில் தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் டாஸ் தோற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் பும்ரா, ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு கருண் நாயர், ஜுரேல், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்படடுள்ளனர்.

    • கே.எல். ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
    • கே.கே.ஆர். அணி அவரை வாங்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெரும்தொகை கொடுத்து ஏலம் எடுத்தது. டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடினார். மேலும், இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் உறுதியானால், கேப்டன் பதவி கூட கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் முதல் இடம் பிடிக்கும் அணி தகுதி பெறும்.
    • ஆசிய கண்டத்தில் ஐசிசி தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் இந்தியா தகுதி பெறும்.

    2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம் பெறுகிறது. 1900-க்குப் பிறகு முதன்முறையாக கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ளது.

    ஆண்கள் அணி, பெண்கள் அணி என மொத்தம் 12 அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் தலா 15 பேர் இடம் பிடிக்க முடியும்.

    6 அணிகளில் அமெரிக்கா போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நேரடியாக தகுதி பெறும். மற்ற அணிகளை ஆசியா, ஓசேனியா. ஐரோப்பா, ஆப்பிரிக்கா பிராந்திய அடிப்படையில் பிரித்து, அவற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் தகுதி பெற வேண்டும். அப்படி செய்தால்தான் உலகளாவிய தொடராக இருக்கும் என ஒலிம்பிக் கமிட்டி விரும்புகிறது.

    அதன்படி பார்த்தால் ஐசிசி தரவரிசையில் ஆசிய அளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஓசேனியாவில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இதன்படி பார்த்தால் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நான்கு அணிகள் ஒவ்வொரு கண்டத்தில் முதலிடம் பிடிக்கும் அணியாக இருக்கும். 5ஆவது அணி அமெரிக்கா. 6ஆவது அணி எப்படி தகுதி பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

    2028ஆம் அண்டு ஜூலை 20 முதல் ஜூலை 29 வரை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா போன்ற அணிகள் அமெரிக்க கண்டத்தில் இடம் பெறும். அமெரிக்கா போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் தகுதி பெறுவதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • பும்ரா களம் இறங்க வாய்ப்பில்லை.
    • ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் விளையாட இருக்கிறார்கள்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் தொடங்குகிறது. இந்திய அணியில் பும்ரா இடம் பெறமாட்டார் எனத் தெரிகிறது. இதனால் முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு குழுவை முன்னின்று நடத்த உள்ளார்.

    முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் என்று களம் இறங்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் முகமது சிராஜ் லண்டன் ஓவல் மைதானத்தில் 5 விக்கெட் வீழ்த்துவார் என ஸ்டெயின் கணித்துள்ளார்.

    • லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.

    இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    முன்னதாக, இந்த தொடரில் ஒரு ஓவரில் பௌலர் ஒருவர் 18 பந்துகளை வீசிய வினோத சம்பவம் நடந்தது. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து ஆடிய பாகிஸ்தான் 7.5 ஓவர்கள் முடிவில் 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் தான் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஒரு ஓவரில் 18 பந்துகளை வீசினார். 8ஆவது ஓவரை வீசிய ஜான் ஹாஸ்டிங்ஸ், 12 வைடு பால், ஒரு நோ பால் உட்பட 18 பந்துகளை வீசினார். ஆனாலும் அந்த ஓவரை அவர் முழுமையாக முடிக்கவில்லை. 5 பந்துகள் மட்டுமே அவர் வீசியிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வைடு மூலமாகவே பாகிஸ்தான் அணியை அந்த ஓவரில் அவர் வெல்ல வைத்தார். 

    • மணமக்களுக்கு சில ஆலோசனைகளை நகைச்சுவையுடன் கூறியது, இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
    • நீங்கள் உலக கோப்பையை வென்றீர்களா, இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி, ஆட்டக் களத்தில் அமைதியானவர் என்று பெயர் பெற்றவர். அதனால் அவரை 'கேப்டன் கூல்' என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். சமீபத்தில் அவர் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மணமக்களுக்கு சில ஆலோசனைகளை நகைச்சுவையுடன் கூறியது, இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    மணமக்களுக்கு அருகில் நின்றபடி மைக்கில் பேசிய தோனி, "திருமணம் என்பது நல்ல விஷயம். நீங்கள் அவசரப்பட்டு அதை செய்து கொண்டீர்கள். சிலர் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள். அவர்களில் மணமகனும் ஒருவர். எல்லோருமே இதே மாயபடகில்தான் இருக்கிறார்கள்" என்று அவர் கூறியதும், விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

    தொடர்ந்து பேசிய தோனி, 'நீங்கள் உலக கோப்பையை வென்றீர்களா, இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை. திருமணத்துக்குப் பிறகு அனைத்து கணவர்களும் ஒரே நிலையில்தான் இருப்பார்கள் என்பதை மனைவி புரிந்து கொள்ள வேண்டும்." என்று கூறிய அவர், பின்னர் மணமகனிடம் திரும்பி, "உங்கள் மனைவி வித்தியாசமானவர் என்று நினைத்தால் நீங்களும் தவறாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்றார். அதற்கு மணமகன், "ஆமாம் என்னுடையவர் வேறுபட்டவர் அல்ல என்றார். இதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர்.

    இறுதியில் இருவருக்கும் சேர்த்து ஒரு ஆலோசனை கூறினார் தோனி, "சண்டை வந்தால் அமைதியாக இருங்கள். ஆண்கள் 5 நிமிடத்தில் அமைதியாகிவிடுவார்கள். அவர்களின் சக்தி அவர்களுக்குத் தெரியும்" என்றார். டோனியின் அறிவுரைகள் திருமணவிழாவை கலகலப்பாக்கியது.



    • இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    கடைசி டெஸ்டுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. பந்து தாக்கி கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலகி விட்டார். இதே போல் 'நம்பர் ஒன்' வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கும்படி கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. நடப்பு தொடரில் 119.4 ஓவர்கள் பந்து வீசி 14 விக்கெட் வீழ்த்தி இருக்கும் பும்ராவுக்கு, ஏற்கனவே முதுகில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. அதிகமான போட்டிகளில் ஆடும் போது மீண்டும் முதுகில் சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால் இந்த டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களம் காணுகிறார். இதே போல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடத்தை துருவ் ஜூரெல் நிரப்புகிறார். ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

    நடப்பு தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் பட்டையை கிளப்புகிறது. கேப்டன் சுப்மன் கில் (722 ரன்), லோகேஷ் ராகுல் (511 ரன்), ரவீந்திர ஜடேஜா (454 ரன்) ஆகியோர் ரன்வேட்டை நடத்தியுள்ளனர். முந்தைய டெஸ்டில் 311 ரன்கள் பின்தங்கி இருந்த போதிலும் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அற்புதமான சதத்தால் 143 ஓவர்கள் போராடி 'டிரா' செய்தது.

    இந்த பயணத்துக்கு முன்பாக விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தாக்குப்பிடிக்குமா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் முதல் 4 டெஸ்களிலும் ஆட்டத்தை 5-வது நாளுக்கு அதுவும் கடைசி பகுதி வரை இழுத்து சென்று தொடரையே பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்ததாக மாற்றி இருக்கிறது, நமது அணி. பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

    தொடரை பறிகொடுக்காமல் 2-2 என்று சமன் செய்தாலே அது பெரிய சாதனையாக இருக்கும். 2021-22-ம் ஆண்டு தொடரையும் இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் தான் செய்திருந்தது. எனவே இந்திய அணி, இங்கிலாந்தின் ஆக்ரோஷத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வெற்றியோடு நிறைவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 4-வது டெஸ்டில் வலது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடல்தகுதியை எட்டவில்லை. இதனால் முக்கியமான இந்த டெஸ்டில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார். கடந்த இரு டெஸ்டிலும் ஆட்டநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் (304 ரன் மற்றும் 17 விக்கெட்) இல்லாதது நிச்சயம் இங்கிலாந்துக்கு பின்னடைவு தான். இதே போல் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் லியான் டாசன், பிரைடன் கார்ஸ் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

    சில முன்னணி வீரர்கள் ஒதுங்கினாலும் இங்கிலாந்து பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சூப்பர் பார்மில் உள்ள ஜோ ரூட் (2 சதம் உள்பட 403 ரன்), பென் டக்கெட் (365 ரன்), விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் (424 ரன்) தொடர்ந்து ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள்.

    பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'கடைசி டெஸ்டில் ஆட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த போட்டியில் நான் இல்லாவிட்டாலும் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றும் என்று நம்புகிறேன். 4-வது டெஸ்ட் முடிந்து அடுத்த 3 நாட்களில் 5-வது டெஸ்ட் தொடங்குகிறது. இது போன்ற 5 டெஸ்ட் தொடரில் இந்த இடைவெளி மிகவும் குறைவாகும். அதிக ஓவர்கள் பந்து வீசியிருக்கிறோம். நிறைய நேரம் களத்தில் செலவிட்டு இருக்கிறோம். அதனால் குறைவான இடைவெளியில் போட்டி தொடங்குவது இரு அணிக்குமே கடினமாக இருக்கும். இரண்டு டெஸ்ட் போட்டியில் 8-9 நாள் இடைவெளி கிடைத்தது. அதற்கு பதிலாக ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 4-5 நாட்கள் இடைவெளி கொடுத்திருக்கலாம்' என்றார்.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் அல்லது குல்தீப் யாதவ் அல்லது அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், அன்ஷூல் கம்போஜ், ஆகாஷ் தீப்.

    இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி சுமித், கிறிஸ் வோக்ஸ், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு.

    இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தொண்டு நிறுவன நிதி திரட்டல் கிரிக்கெட் போட்டியில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் விளையாடினார்.

    இது தொடர்பான புகைப்படங்களை லார்ட்ஸ் மைதானம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் போராடி இறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    • முதல் 4 வரிசையில் எந்த மாற்றமும் இல்லை.
    • 5-வது வரிசையில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பண்டிற்கு பதிலாக துருவ் ஜூரலை அணியில் சேர்த்துள்ளார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்ததெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். அதில் முதல் 4 வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. 5-வது வரிசையில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பண்டிற்கு பதிலாக துருவ் ஜூரலை அணியில் சேர்த்துள்ளார்.

    கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கும் இர்பான் பதான் தனது அணியில் வாய்ப்பு வழங்கிய நிலையில் அன்ஷூல் கம்போஜை அணியில் இருந்து நீக்கியுள்ளார்.

    மேற்கொண்டு அவர் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜை தேர்வு செய்துள்ள நிலையில் அறிமுக வீரர் ஆர்ஷ்தீப் சிங் அல்லது பிரஷித் கிருஷ்ணா லெவனில் இடம்பிடிக்கலாம் என்பதையும் கூறியுள்ளார்.

    இர்பான் பதான் தேர்வு செய்த இந்திய அணி பிளேயிங் லெவன்:

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்/பிரசித் கிருஷ்ணா.

    • லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    • முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் நாளை மோத இருந்தது.

    லீட்ஸ்:

    2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.

    இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

    • பரத் அருணின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது.
    • இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தவர் பரத் அருண். அவர் 2022-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.

    பரத் அருணின் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. இவர் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் லக்னோ அணிக்கு 62 வயதான பரத் அருண், 2 ஆண்டுகள் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து செயல்படுவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பரத் அருண் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 4ஆவது டெஸ்டுக்கும் 5ஆவது டெஸ்டுக்கும் இடையில் 3 நாட்கள் இடைவெளி மட்டுமே உள்ளது.
    • ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5ஆவது மற்றும் கடைசி போட்டி நாளை தொடங்கியது.

    5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். மேலும் ஆர்ச்சர் இடம்பெற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாசன், கார்ஸ் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொடரில் முதல் டெஸ்டுக்கும் 2ஆவது டெஸ்டுக்கும் இடையில் ஜூன் 25 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை 7 நாட்கள் ஓய்வு இருந்தது. ஆனால் 2ஆவது டெஸ்டுக்கும் 3ஆவது டெஸ்டுக்கும் இடையில் ஜூலை 7 முதல் 9 வரை 3 நாட்கள் மட்டுமே ஓய்வு இருந்தது.

    அதேவேளையில் 3ஆவது டெஸ்டுக்கும் 4ஆவது டெஸ்டுக்கும் இடையில் 8 நாட்கள் ஓய்வு இருந்தது. 4ஆவது டெஸ்ட் போட்டிக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கும் இடையில் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.

    இந்த நிலையில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் 3 நாட்கள் இடைவெளி ரொம்ப குறைவு. வீரர்கள் காயத்தில் இருந்து மீள்வதற்கான காலஅவகாசம் போதாது என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் இடையிலான இடைவெளி சற்று அதிகமாக இருக்க வேண்டும். இரண்டு போட்டிக்கு 17 நாட்களும், 2 போட்டிகளுக்கு தலா 3 நாட்களும் இடைவெளி உள்ளது. மொத்தமாக உள்ள 23 நாட்களை குறைந்த பட்சமா ஐந்து நாட்களாக நிலையானதாக இருக்க வேண்டும்.

    இது இரண்டு அணிகளுக்கும் மிகவும் கடினமானது. பந்து வீச்சாளர்கள் ஏராளமான ஓவர்கள் வீச வேண்டிய நிலை உள்ளது. அதிக நேரம் களத்தில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

    இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    ×