என் மலர்
நீங்கள் தேடியது "லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்"
- லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது.
- பாதுகாப்பான, தடையற்ற, வரலாற்றி வெற்றி மிக்க தொடராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்- டிரம்ப்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தற்போதில் இருந்தே தயாராகுவதற்காக பணிக்குழுவை அமைத்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த குழுவின் பணி என்ன? என்பதை முழுமையாக வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.
"பாதுகாப்பான, தடையில்லாத, வரலாற்று வெற்றி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் அமெரிக்காவிற்கு ஒரு அற்புதமான தருணமாக உருவாகி வருகிறது. இது நம்பமுடியாததாக இருக்கும். இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு அமெரிக்கா குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. அதன்பின் 2028 லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்த இருக்கிறது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட சில போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் முதல் இடம் பிடிக்கும் அணி தகுதி பெறும்.
- ஆசிய கண்டத்தில் ஐசிசி தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் இந்தியா தகுதி பெறும்.
2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம் பெறுகிறது. 1900-க்குப் பிறகு முதன்முறையாக கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ளது.
ஆண்கள் அணி, பெண்கள் அணி என மொத்தம் 12 அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் தலா 15 பேர் இடம் பிடிக்க முடியும்.
6 அணிகளில் அமெரிக்கா போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நேரடியாக தகுதி பெறும். மற்ற அணிகளை ஆசியா, ஓசேனியா. ஐரோப்பா, ஆப்பிரிக்கா பிராந்திய அடிப்படையில் பிரித்து, அவற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் தகுதி பெற வேண்டும். அப்படி செய்தால்தான் உலகளாவிய தொடராக இருக்கும் என ஒலிம்பிக் கமிட்டி விரும்புகிறது.
அதன்படி பார்த்தால் ஐசிசி தரவரிசையில் ஆசிய அளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஓசேனியாவில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இதன்படி பார்த்தால் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நான்கு அணிகள் ஒவ்வொரு கண்டத்தில் முதலிடம் பிடிக்கும் அணியாக இருக்கும். 5ஆவது அணி அமெரிக்கா. 6ஆவது அணி எப்படி தகுதி பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
2028ஆம் அண்டு ஜூலை 20 முதல் ஜூலை 29 வரை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா போன்ற அணிகள் அமெரிக்க கண்டத்தில் இடம் பெறும். அமெரிக்கா போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் தகுதி பெறுவதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட், ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
- லாஸ் ஏஞ்சல்சில் 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இதில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதல் இடம்
பிடித்து அசத்தியது. இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.
இதையடுத்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 34-வது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா ஜூலை 14-ம் தேதியும், நிறைவு விழா ஜூலை 30-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஸ்காட்லாந்து கிரிக்கெட் ஆகியவை இணைந்து கிரேட் பிரிட்டனாக விளையாட ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
2026 மற்றும் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பைகள், விளையாட்டை வளர்ப்பதற்கும் மற்றும் கிரிக்கெட் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள அதிகமான மக்களை ஊக்குவிக்கவும் இது மற்றொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
லாஸ் ஏஞ்சல்சில் ஏற்கனவே 1932 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளன. தற்போது அங்கு 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






