என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஜிம்பாப்வே இரண்டு இன்னிங்சிலும் முறையே 149 ரன்களும், 165 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்கள் குவித்தது.
ஜிம்பாப்வே- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து வீரர் மாட் ஹென்ரி 6 விக்கெட் வீழ்த்தினார். நாதன் ஸ்மித் 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டேவன் கான்வே 88 ரன்களும், டேரில் மிட்செல் 80 ரன்களும் அடித்தனர். 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 165 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மிட்செல் சான்ட்னெர் 4 விக்கெட்டும் மாட் ஹென்ரி மற்றும் ஓ'ரூர்கே ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே 165 ரன்களில் சுருண்டதால், ஒட்டுமொத்தமாக 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இதனால் 8 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 1 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்திய தரப்பில் கருண் நாயர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.
3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கருண் நாயர் 57 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னிலும் சிராஜ் 0, பிரஷித் கிருஷ்ணா 0 எனவும் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
- முதல் இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
- 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார்.
இங்கிலாந்தின் செஸ்டரில் துர்காம்- சுர்ரே அணிகளுக்கு இடையிலான கவுன்ட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சுர்ரே அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் விளையாடி வருகிறார்.
முதல் இன்னிங்சில் துர்காம் 153 ரன்னில் சுருண்டது. சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் சுர்ரே முதல் இன்னிங்சில் 322 ரன்கள் குவித்தது.
169 ரன்கள் பின்தங்கிய நிலையில் துர்காம் அணி 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 344 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சாய் கிஷோர் அபாரமான பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். 113.4 ஓவரில் 41.4 ஓவர்கள் வீசினார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சுர்ரே 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார்.
- 100 ரன்கள் கடப்பார் என நம்புவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர் கருண் நாயர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இவரது அரை சதத்தால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 98 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் கருண் நாயர் குறித்து கெவின் பீட்டர்சன் கூறியதாவது:-
நேற்றைய முதல்நாள் நாளில் இந்தியாவின் பேட்டிங்கை நிலை நிறுத்திய கருண் நாயரின் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்டத்தில் மிகப்பெரிய அளவில் கடின உழைப்பை போட்டுள்ளார். இங்கிலாந்தில் பேட்டிங் செய்வது குறித்து ஐபிஎல் தொடரின்போது, பலமணி நேரம் நாங்கள் இருவரும் பேசியுள்ளோம். இன்று அற்புதமான 100 ரன்களை கடப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 186 ரன்கள் அடித்தது.
- கடைசி பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில், ஆஸ்திரேலியா 1 ரன் மட்டுமே எடுத்தது.
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 2ஆவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ்- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 186 ரன்கள் குவித்தது. ஸ்மட்ஸ் 57 ரன்களும், மோர்னே வான் விக் 76 ரன்களும் விளாசினர்.
பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. 19 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 173 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 20ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆஸ்திரேலியா சிக்ஸ் அடித்தது. முதல் ஐந்து பந்தில் 11 ரன்கள் அடித்தது, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 2ஆவது ரன்னுக்கு ஓடியபோது டி வில்லியர்ஸ் ரன்அவுட் (நாதன் கவுல்டர்-நைல்) ஆக்க தென்ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
- பென் ஸ்டோக்ஸ் ஆர்ச்சர் ஏற்கனவே 5ஆவது டெஸ்டில் விளையாடவில்லை.
- இந்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் காயம் அடைந்திருப்பது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மதிய உணவு இடைவேளையின்போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் நீண்ட நேரம் போட்டி பாதிக்கப்பட்டது.
இறுதியாக 64 ஓவர்கள் வீசப்பட்டன. இதில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு குழுவை கிறிஸ் வோக்ஸ் வழி நடத்திச் சென்றார். நேற்றைய ஆட்டத்தின்போது அவரது தோள்பட்டையில் பலத்த காயம் (shoulder dislocation) ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் 5ஆவது டெஸ்டில் மேற்கொண்டு விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ் வோக்ஸ் விளையாடாதது உறுதியானால் அது இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பாகும். இங்கிலாந்து அணியில் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது.
- 3வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன், சுப்மன் கில் ஜோடி 45 ரன்கள் சேர்த்தது.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.
3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங்க், அட்கின்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.
- நியூசிலாந்தின் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
புலவாயோ:
ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 60.3 ஓவரில் 149 ரன்னில் சுருண்டது. கேப்டன் கிரேக் எர்வின் 39 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங் (41 ரன்), டிவான் கான்வே (51 ரன்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. வில் யங் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 34 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கான்வே உடன் டேரில் மிட்செல் இணைந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். கான்வே 88 ரன்னிலும், டேரில் மிட்செல் 80 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 3 விக்கெட்டும், சிவாங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஜிம்பாப்வே அணி இன்னும் 127 ரன்கள் பின்தங்கி உள்ளது.
- கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரே இன்னிங்சில் 732 ரன்கள் குவித்திருந்தார்.
- சுப்மன் கில் இதுவரை இங்கிலாந்தில் தொடரில் 737 ரன்கள் அடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5ஆவது போட்டி இன்று தொடங்கியது. முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி கேப்டனான சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி போட்டிக்கு முன்னதாக 8 இன்னிங்சில் 4 சதங்களுடன் (இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்) 722 ரன்கள் குவித்திருந்தார்.
இன்றைய போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை 15 ரன்கள் எடுத்துள்ளார். 11 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 732 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. இதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். தற்போது வரை 737 ரன்கள் அடித்துள்ளார்.
- சாய் சுதர்சன் 67 பந்தில் 25 ரன்கள் அடித்துள்ளார்.
- சுப்மன் கில் 23 பந்தில் 15 ரன்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஓவல் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தனர். இதனால் ஜெய்ஸ்வால் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்த கே.எல். ராகுல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினர். என்றாலும், கிறிஸ் வோக்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் கே.எல். ராகுல் இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அப்போது இந்தியா 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் நேர்த்தியாக பந்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்து வந்தனர். இந்திய அணி 23 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல்நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. சாய் சுதர்சன் 23 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- அட்கின்சன் பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
- இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தால் கே.எல். ராகுல்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். ஓவல் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தனர். இதனால் ஜெய்ஸ்வால் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்த கே.எல். ராகுல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினர். என்றாலும், கிறிஸ் வோக்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் கே.எல். ராகுல் இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அப்போது இந்தியா 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்துள்ளார்.
- முன்னணி 6 அணிகள் ஒரு பிரிவாக பிரிக்கப்படும்.
- மற்ற 6 அணிகள் மற்றொரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும். 2025 முதல் 2027 வரை நடத்தப்படும் போட்டிகளில் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
இனிமேல் தலா 6 அணிகளா இரண்டு பிரிவுகளாக பிரித்து டெஸ்ட் தொடரை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான யதார்த்தம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களை பிடித்துள்ள அணிகள் ஒரு பிரிவாகவும், மீதமுள்ள 3 அணிகளுடன் மேலும் 3 அணிகள் சேர்க்கப்பட்டு 2ஆவது பிரிவாகவும் பிரிக்கப்படும்.
முதல் பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணி, அடுத்த முறை 2ஆவது பிரிவுக்கு தள்ளப்படும். 2ஆவது பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணி முதல் பிரிவுக்கு முன்னேறும். இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். முன்னணி அணிகள் அடிக்கடி மோதிக்கொள்ளும். இதனால் வருவாய் அதிக அளவில் ஈட்டலாம் என்பது ஐசிசி-யின் திட்டம்.
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் 7ஆவது இடத்தில் உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தான் 2ஆவது பிரிவுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் முன்னணி அணிகளுடன் விளையாடாத நிலை ஏற்படும்.
இந்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்க்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றால் முழு உறுப்பினர் நாடுகளான 12 பேரில், 3-ல் 2 பங்கு உறுப்பினர் நாடுகள் ஆதரவு தேவை.
"கிரிக்கெட் அதிக்கம் செலுத்தும் சில நாடுகளின் சொத்து அல்ல. சிறிய அணிகளுக்கு டாப் லெவல் போட்டிகளில் விளையாட தொடர்ந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே அவர்களால் முன்னேற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.






