என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.

    ஹராரே:

    இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    பிரியன் பென்னெட் 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • ஒருநாள் போட்டிகளின் அணிகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இந்த தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    துபாய்:

    ஒருநாள் போட்டிகளின் அணிகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இந்த தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.

    இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகியவை 4,5,6 ஆகிய இடங்களில் உள்ளன.

    ஆப்கானிஸ்தான் அணி 7வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 8-வது இடத்துக்கு சரிந்துள்ளது

    இந்த ஆண்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்று மோசமான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தி இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

    இங்கிலாந்து அணி கடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன்.
    • எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன்.

    இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் அபார திறமை கொண்டவர். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வந்தார்.

    2012ஆம் ஆண்டில் அறிமுகமான அவர், 2018ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை. 2022ஆம் ஆண்டுக்கப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில், இந்திய அணியில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக புவனேஷ்வர் குமார் கூறுகையில் "நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன். தற்போது வரை ஓய்வு குறித்து நினைத்ததில்லை. எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன். மற்றவை தேர்வாளர்கள் கையில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    35 வயதாகும் புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 87 டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த நிறுவனம்தான் உரிமையாளர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக என்.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த நிறுவனம்தான் உரிமையாளர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

    2025ஆம் ஆண்டு நிதியாண்டின்படி, EWS பைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 47.08 பங்குகளை வைத்துள்ளது. என்.சீனிவாசன் 0.11 சதவீதம், சித்ரா சீனிவாசன் 0.03 சதவீதம், ரூபாய் குருநாத் 0.01 சதவீதம் பங்குகளையும் வைத்துள்ளனர்.

    சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் இயக்குனர்கள் குழுவால், என். சீனிவாசன் மற்றும் அவரது மகள் ரூபா குருநாத் ஆகியோர் அந்நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர். இது கடந்த பிப்ரவரி மாதம் 10ம்தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகவும், வரவிருக்கும் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பில், அவர்களுடைய நியமனம் குறித்த முறையான அறிவிப்பு தீர்மானம் பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் என ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ,இதன் மூலம் முதன்முறையாக சிஎஸ்கே போர்டில் (இயக்குனர்கள் குழுவில்) இருவரும் இணைகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சிமெண்டில் உள்ள இவர்களுடைய பங்குகளை அல்ட்ராடெக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கே.எஸ். விஸ்வநான் நிர்வாக இயக்குனராக மூன்று வருடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 19ஆம் தேதியில் இருந்து 3 வருடம் பதவியில் நீடிப்பார்.

    சிஎஸ்கே 2025 நிதியாண்டில் நிகர லாபத்தில் 20 சதவீதம் சரிவையும், வருவாயில் 4.7 சதவீதம் சரிவையும் எதிர்கொண்டுள்ளது. 644 கோடி ரூபாய் வருவாயும், 181 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது.

    இந்த நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸை தவிர்த்து தென்ஆப்பிரக்கா கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக்கில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட்டின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளது. மேலும் வெளிநாடுகளில் கிரிக்கெட் அகாடமியை விரிவுப்படுத்தி வருகிறது.

    சென்னை அணியின் ஆலோசகராக திகழ்ந்து வந்தார். தற்போது அணியின் சேர்மனாகியுள்ளதால், அணிகளுடன் பயணிப்பார். இது அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

    • பிசிசிஐ அனுமதியுடன் கோலி லண்டனில் உடற்தகுதியை நிரூபித்தார் .
    • கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

    இதனிடையே லண்டனில் இருந்தபடியே விராட் கோலி.உடற்தகுதியை உறுதிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மற்ற இந்திய வீரர்கள் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கையில், லண்டனில் இருந்தபடியே விராட் கோலி. உடற்தகுதியை பிரூபித்துள்ளார்.

    பிசிசிஐ அனுமதியுடன் லண்டனில் உடற்தகுதியை நிரூபித்திருந்தாலும், ரோஹித் உள்ளிட்ட மற்ற வீரர்கள் வரும்போது இவருக்கு மட்டும் ஏன் விலக்கு என பலரும் கேள்வி எழுப்புவதால் இது விவாதப் பொருளாகியுள்ளது.

    • ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RCB Cares தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மேலும், தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு விராட் கோலி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்!" என்று கோலி தெரிவித்துள்ளார். 

    • ஐபிஎல் போட்டியில் விளையாடுவதில்லை என முடிவு எடுத்த நிழைலயில் ILT20 ஏலத்தில் பெயர் பதிவு செய்துள்ளார்.
    • ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடினார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என அறிவித்தார். இந்திய அணி, ஐபிஎல் போட்டியில் விளையாடாத வீரர் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அஸ்வின் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி20 (சர்வதேச லீக் டி20 தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடுவது உறுதியானது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கிலும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ டோட் க்ரீன்பெர்க், அஸ்வினுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வின் பிக் பாஷ் லீக்கில் விளையாட முன்வந்தால், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவது முதல் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஆவார்.

    • வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டின் நட்சத்திர வேகபந்து வீச்சாளராக திகழ்ந்தவர்கள் வாசிம் அக்ரம். இடது கை வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். இவருக்கு இணையான ஸ்விங் பவுலர் இல்லை எனலாம். அதேவேளையில் யார்க்கர் பந்துகளும் வீசுவதில் வல்லவர். இம்ரான் கான், வாசிம் அக்கரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியபோது, தலைசிறந்த வேகப்பந்து அணியாக திகழ்ந்தது.

    தற்போதைய காலத்தில் பும்ரா போன்ற வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். அந்த காலத்து கிரிக்கெட் வீரர்களுடன் தற்போதைய வீரர்களை ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள். குறிப்பாக வாசிம் அக்ரம் உடன், பும்ராவை ஒப்பிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் 1990-களையும், தற்போதைய காலக்கட்டத்தை ஒப்பீடு செய்வது குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-

    1990 மற்றும் இன்றைய காலக்கட்டத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமற்றது. நான் இடது கை பழக்கம் உள்ளவனாக இருந்தபோது, பும்ரா வலது கை பழக்கம் உள்ளவர். சமூக ஊடகங்களில் மக்கள் வாதிடுவதை விரும்புகிறார்கள்.

    இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். வாசிம் அக்ரம் 1985 ஆண்டு முதல் 2002ஆம் அண்டு வரை 17 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

    பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பும்ரா 2018ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

    • ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல், இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் விளாசினர்.
    • ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் செதிகுல்லா அடல் 64 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 65 ரன்களும் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் பஹீம் அஷ்ஃரப் 4 விக்கெட் விழ்த்தினார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகிப்ஜதா பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பரூக்கி வீழ்த்தினார்.

    அதன்பின் பஹர் ஜமான் (25), சர்மான் ஆகா (20) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது முகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    10ஆவது வீரராக களம் இறங்கிய ஹாரிஸ் ராஃப் அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தினார். அவரால் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் (16 பந்தில் 4 சிக்கர்) எடுத்த போதிலும் பாகிஸ்தானால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதலாவதாக மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 131 ரன்களுக்கு சுருண்டது.
    • ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி 54 ரன்னில் வெளியேறினார்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி லீட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 24.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 54 ரன்கள் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டும், வியான் முல்டர் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

    மார்கிரம், ரிக்கல்டன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அவர் 55 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    முதல் விக்கெட்டுக்கு மார்கிரம்-ரிக்கல்டன் ஜோடி 121 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 131 ரன்களுக்கு சுருண்டது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லீட்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்க வீரர்கள் துல்லியமாகப் பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகள் விழுந்தன.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் இங்கிலாந்து அணி 24.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டும், வியான் முல்டர் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • இந்த தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது.
    • இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதன் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே அணி விவரம்:-

    சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், பிராட் எவன்ஸ், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிளசிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கரவா, பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ்.

    ×