என் மலர்
நீங்கள் தேடியது "புவனேஷ்வர் குமார்"
- நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன்.
- எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன்.
இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் அபார திறமை கொண்டவர். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வந்தார்.
2012ஆம் ஆண்டில் அறிமுகமான அவர், 2018ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை. 2022ஆம் ஆண்டுக்கப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், இந்திய அணியில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புவனேஷ்வர் குமார் கூறுகையில் "நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன். தற்போது வரை ஓய்வு குறித்து நினைத்ததில்லை. எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன். மற்றவை தேர்வாளர்கள் கையில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
35 வயதாகும் புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 87 டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- புவனேஷ்வர் குமார் இதுவரை 185 போட்டிகளில் விளையாடி 193 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் பியூஸ் சாவ்லாவை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடம் பிடித்தார்.
புவனேஷ்வர் குமார் இதுவரை 185 போட்டிகளில் விளையாடி 193 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் 214 விக்கெட்டுகளுடன் சாஹல் முதல் இடத்தில உள்ளார்.
குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள ஒரே வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது.
- சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய ஆட்டங்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 15 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க குறிவைக்கும். இந்த சீசனில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அந்த அணியின் முந்தைய லீக் ஆட்டம் (குஜராத்துக்கு எதிரான) மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
அதிரடியில் அசத்தும் ஐதராபாத்
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (533 ரன்), அபிஷேக் ஷர்மா (401), ஹென்ரிச் கிளாசென் (339), நிதிஷ் குமார் ரெட்டி என அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். பந்து வீச்சில் நடராஜன், கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார், நாதன் எலிஸ்சும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக பொறுப்பு கேப்டன் சாம் கர்ரன், பேர்ஸ்டோ ஆகியோர் நாடு திரும்பியதும், காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா விலகியதும் அந்த அணிக்கு பின்னடைவாகும்.
தோள்பட்டை காயம் காரணமாக முதல் 5 ஆட்டத்துக்கு பிறகு ஒதுங்கிய ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஜிதேஷ் ஷர்மா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஐதராபாத் அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் தேட பஞ்சாப் தீவிரம் காட்டும். வலுவான ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளது.
- அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும்.
17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 15 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஜிதேஷ் ஷர்மா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.
- லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
- முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் துவங்கும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடருக்கான எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளும், பி பரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இரண்டு பிரிவுகளிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்த தொடருக்கான லீக் சுற்று போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா குணமடைய மார்ச் மாதம் ஆகும். இதனால், அவர் லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை கொண்டுவரலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "இன்றும் புவனேஷ்வர் குமாரால் பந்தை இரண்டு புறமும் ஸ்விங் செய்து வீச முடியும். 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின்போது அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவரை இந்திய அணி தற்போது மறந்தே விட்டது."
"என்னை பொருத்தவரை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமாரை கொண்டு வந்தால் அது அணிக்கு நல்லதாக இருக்கும்" என்றார்.
- இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து 121 ரன்களுக்கு சுருண்டது.
- புவனேஷ்வர் குமார், பும்ராவின் சிறப்பான வேகப்பந்து வீச்சால் இந்தியா வெற்றி.
பர்மிங்காம்:
இங்கிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டையும், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வர்குமார், ஸ்விங் முறை பந்து வீச்சு மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார்.
டி20 கிரிக்கெட்டில் பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆனது தமக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியதில் ஆச்சரியமில்லை என்றும், அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்திற்கு எதிராக அவர்களது சொந்த நாட்டில் 3-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றினால் நன்றாக இருக்கும் என்று அவர் ஒப்புக்கொண்டார்
தாம் நேர்மறையாகவே சிந்திப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தமக்கு எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன் என்றும் புவனேஷ்வர் குமார் குறிப்பிட்டார்.






