என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சிஎஸ்கே அணி சேர்மனாக என்.சீனிவாசன் நியமனம்..!
    X

    சிஎஸ்கே அணி சேர்மனாக என்.சீனிவாசன் நியமனம்..!

    • சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த நிறுவனம்தான் உரிமையாளர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக என்.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த நிறுவனம்தான் உரிமையாளர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

    2025ஆம் ஆண்டு நிதியாண்டின்படி, EWS பைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 47.08 பங்குகளை வைத்துள்ளது. என்.சீனிவாசன் 0.11 சதவீதம், சித்ரா சீனிவாசன் 0.03 சதவீதம், ரூபாய் குருநாத் 0.01 சதவீதம் பங்குகளையும் வைத்துள்ளனர்.

    சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் இயக்குனர்கள் குழுவால், என். சீனிவாசன் மற்றும் அவரது மகள் ரூபா குருநாத் ஆகியோர் அந்நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர். இது கடந்த பிப்ரவரி மாதம் 10ம்தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகவும், வரவிருக்கும் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பில், அவர்களுடைய நியமனம் குறித்த முறையான அறிவிப்பு தீர்மானம் பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் என ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ,இதன் மூலம் முதன்முறையாக சிஎஸ்கே போர்டில் (இயக்குனர்கள் குழுவில்) இருவரும் இணைகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சிமெண்டில் உள்ள இவர்களுடைய பங்குகளை அல்ட்ராடெக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கே.எஸ். விஸ்வநான் நிர்வாக இயக்குனராக மூன்று வருடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 19ஆம் தேதியில் இருந்து 3 வருடம் பதவியில் நீடிப்பார்.

    சிஎஸ்கே 2025 நிதியாண்டில் நிகர லாபத்தில் 20 சதவீதம் சரிவையும், வருவாயில் 4.7 சதவீதம் சரிவையும் எதிர்கொண்டுள்ளது. 644 கோடி ரூபாய் வருவாயும், 181 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது.

    இந்த நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸை தவிர்த்து தென்ஆப்பிரக்கா கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக்கில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட்டின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளது. மேலும் வெளிநாடுகளில் கிரிக்கெட் அகாடமியை விரிவுப்படுத்தி வருகிறது.

    சென்னை அணியின் ஆலோசகராக திகழ்ந்து வந்தார். தற்போது அணியின் சேர்மனாகியுள்ளதால், அணிகளுடன் பயணிப்பார். இது அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×