என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
    • ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

    இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 69-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் மத்தியப் பிரதசே மாநிலம் இந்தோர் நகரில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்த போட்டியில் கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

    இந்நிலையில், 69-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷய் ராம் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

    சாதனைப் படைடத்த கராத்தே வீரர் அக்ஷய் ராமுக்கு தலைமை பயிற்சியாளர் ஷிகான்.டி.நிர்மல்குமா் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

     

    • 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சி் ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்தது.
    • 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணிககு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது.

    3வது டெஸ்டின் முதல் இன்னிங்சி் ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    2வது இன்னிங்சில் ஆஸ்திரேலயா 349 ரன் எடுத்தது. 435 ரன் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 352 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    • சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
    • வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்கு இரு அணிகளும் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள தீவிரம் காட்டும். வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 26 இருபது ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    • ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டம் ஹராரேவில் நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதன்படி, அந்த அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் நகரவா நியமிக்கப்பட்டார்.

    ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.

    • ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின.

    லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பை போட்டி பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
    • டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டன் சுப்மன் கில் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிறங்கள் நிச்சயம் மங்காது என பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சீனாவில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

    பீஜிங்:

    சீனாவின் ஹாங்சு நகரில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' ஜோடி இதில் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

    இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையரில் உலகத் தரவரிசையில் நம்பர்-3 ஆக உள்ள சாத்வித் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்றது.

    இந்நிலையில், இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, சீனாவின் வாங் சாங் - லியான் வெய்கெங் ஜோடியை எதிர்கொண்டது.

    இந்திய ஜோடி முதல் செட்டை 21-10 என எளிதில் கைப்பற்றியது.

    இதில் சுதாரித்துக் கொண்ட சீன ஜோடி அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என வென்றது. இதன்மூலம் சீன ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • 2025 ஆண்டு தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
    • தமிழக வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர்.

    2025-ம் ஆண்டில் தமிழக வீரர்களின் முக்கிய விளையாட்டு சாதனைகள் 2025 ஆண்டு தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. தமிழ்நாடு அரசின் விளையாட்டு வளர்ச்சி ஆணையம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகளின் ஆதரவுடன், தமிழக வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர்.

    அதில் தடகளம், பாரா விளையாட்டுகள், சதுரங்கம், ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், டேக்வாண்டோ போன்ற துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.

    1. பாரா விளையாட்டுகள் (Para Sports)கேலோ இந்தியா பாரா கேம்ஸ் 2025 (Khelo India Para Games):

    தமிழக அணி 28 தங்கம், 19 வெள்ளி, 27 வெண்கலம் (மொத்தம் 74 பதக்கங்கள்) வென்று ஒட்டுமொத்த ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தது. பாரா பேட்மிண்டனில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சாம்பியன். மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீ, நவீன் சிவகுமார், ருதிக் ரகுபதி உள்ளிட்டோர் தங்கம் வென்றனர்.

    ஆசிய இளம் பாரா கேம்ஸ் 2025 (Asian Youth Para Games): லின்சியா (பாரா டேக்வாண்டோ) வெண்கலம் வென்றார்.

    இந்தோனேஷியா பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 (Indonesian Para Badminton Championship): தமிழக வீரர்கள் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் (மொத்தம் 14 பதக்கங்கள்) வென்றனர்.

    ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2025 (Asian Para Taekwondo Championship): 9 பதக்கங்கள் வென்றனர்.

    உலக வித்தியாசமான திறனுடையோர் விளையாட்டுகள் 2025 (World Differently-Abled Sports Games): மதுரை பாரா வீரர்கள் பல பதக்கங்கள் வென்று இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்தனர்.

    2. தடகளம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 (Asian Athletics Championships, கொரியா):

    சுபா வெங்கடேசன், சந்தோஷ், விஷால் ஆகியோர் இந்திய கலப்பு ரிலே அணியில் தங்கம் வென்றனர். .




    பிரவீன் சித்ரவேல் டிரிபிள் ஜம்பில் வெள்ளி பதக்கம் வென்றார்.

    தேசிய இன்டர்-ஸ்டேட் தடகள சாம்பியன்ஷிப் 2025 (National Inter-State Athletics Championships):

    இந்த தொடரில் தமிழ்நாட்டின் விஷால் தென்னரசு (Vishal TK) ஆண்கள் 400மீ ஓட்டத்தில் 45.12 வினாடிகளில் முடித்து தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையைப் படைத்தார் (முந்தைய சாதனை: 45.21 வினாடிகள், முகமது அனாஸ், 2019).

    முரளி ஸ்ரீஷங்கர் (Murali Sreeshankar) ஆண்கள் நீளம் பாய்தலில் 8.06 மீட்டர் பாய்ந்து தங்கம் வென்றார்.


    ரோஹித் யாதவ் (Rohit Yadav) ஆண்கள் ஈட்டி எறிதலில் 83.65 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார் (தனிப்பட்ட சிறந்தது).

    அங்கிதா (Ankita) பெண்கள் 3000மீ தடை தாண்டும் ஓட்டத்தில் 9:44.83 நிமிடங்களில் வென்றார்.


    போட்டியின் இறுதியில், தமிழ்நாடு அணி அதிக தங்கப்பதக்கங்கள் (10) பெற்று ஒட்டுமொத்த சாம்பியனாக திகழ்ந்தது.

    தமிழ்நாடு மாநில தடகள சாம்பியன்ஷிப் 2025 (Tamil Nadu State Athletic Championship): வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள்.

    முதல்வர் கோப்பை 2025 (CM Trophy Games): நீல் சம்ராஜ் 100மீ ஓட்டத்தில் தங்கம் வென்று ரூ.1 லட்சம் பரிசு பெற்றார்.

    தைவான் தடகள ஓப்பன் 2025 (Taiwan Athletics Open): இந்திய அணியில் தமிழக வீரர்கள் பங்களித்து 12 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் (மொத்தம் 16 பதக்கங்கள்) வென்றனர்.

    3. கேலோ இந்தியா இளம் வீரர்கள் போட்டிகள் (Khelo India Youth Games 2025)தமிழக அணி 15 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் (மொத்தம் 65 பதக்கங்கள்) வென்றது.

    4. ஸ்கேட்டிங் (Skating)உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 (World Speed Skating Championships): ஆனந்த் வேல்குமார் 42 கிமீ மாரத்தான் பிரிவில் தங்கம் வென்று, இந்தியாவின் முதல் உலக சாம்பியனானார். முன்பு 500மீ ஸ்பிரிண்டில் வெண்கலம், 1000மீயில் தங்கம்.

    தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 (National Roller Skating Championship): தமிழக வீரர் கௌதம் (ஆல்பைன் இவென்ட்) வெண்கலம் வென்றார்.

    5. சதுரங்கம் (Chess)ஆசிய இளம் சதுரங்க சாம்பியன்ஷிப் 2025 (Asian Youth Chess Championship, தாய்லாந்து): ஆரண்யா ஆர் (குழு தங்கம், தனிப்பட்ட தங்கம்), தமிழ் அமுதன் எஸ் (தனிப்பட்ட வெள்ளி, வெண்கலம்), நிவேதிதா வி சி (தனிப்பட்ட தங்கம், வெள்ளி) உள்ளிட்டோர் பல பதக்கங்கள் வென்றனர். பயிற்சியாளர்கள் ஆகாஷ் கணேசன் மற்றும் கவிதா (தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்).

    6. ஸ்குவாஷ் (Squash)ஆசிய ஸ்குவாஷ் டபுள்ஸ் சாம்பியன்ஷிப் 2025 (Asian Squash Doubles Championships, மலேசியா): ஜோஷ்னா சின்னப்பா (பெண்கள் டபுள்ஸ்), வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் (ஆண்கள் டபுள்ஸ், கலப்பு டபுள்ஸ்) தங்கம் வென்றனர்.

    SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 (SDAT Squash World Cup, சென்னை):

    இந்திய அணி முதல் முறையாக உலக ஸ்குவாஷ் அணி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அனஹத் சிங் (Anahat Singh), ஜோஷ்னா சின்னப்பா (Joshna Chinappa), அபய் சிங் (Abhay Singh) ஆகியோர் தலைமையில் அணி செயல்பட்டது. ஜோஷ்னா சின்னப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    7. டேக்வாண்டோ (Taekwondo)தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2025 (National Taekwondo Championship):

    இந்த தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பாக செயல்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக வீரர்கள் 5 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் (மொத்தம் 14 பதக்கங்கள்) வென்றனர்.

    • 16 பந்துகளில் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார்.
    • உண்மையாகவே நான் அவுட்டாகி வெளியே வரும் வரை அது 2-வது அதிவேக அரைசதம் என்று எனக்குத் தெரியாது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 25 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 16 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.

    இந்நிலையில் டி20 போட்டியில் முதலிடத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றியதாக ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையாகவே நான் அவுட்டாகி வெளியே வரும் வரை அது 2-வது அதிவேக அரைசதம் என்று எனக்குத் தெரியாது. சோஷியல் மீடியா டீம் சொன்னதும் 'அடடா முதலிடத்தை மிஸ் பண்ணிட்டோமே' என்று தோன்றியது. இருந்தாலும் யுவி பாஜி (யுவராஜ் சிங்) அந்த சாதனையை வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான் என கூறினார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
    • இந்த தொடரில் இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார்.

    மும்பை:

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது.

    இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. துணை கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இந்த அணியில் 2-வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இஷான் கிஷன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார்.

    நடந்து முடிந்த SMAT தொடரில் கேப்டனாக மற்றும் பேட்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மும்பை:

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பிப்.15-ந்தேதி கொழும்பில் சந்திக்கிறது.

    இந்த நிலையில். டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2-வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். 

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம்:-

    அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன். 




    • மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார்.
    • ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.

    விஜய் ஹசாரே டிராபி தொடர் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி ஒருநாள் தொடராக நடைபெற உள்ளது. இந்த தொடர் பிளேட், எலைட் என்ற இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பிளேட் பிரிவில் மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், பீகார், மணீப்பூர், நாகலாந்து இடம் பெற்றுள்ளது.

    எலைட் பிரிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ரெயில்வேஸ், ஒடிசா, சவுராஸ்ட்ரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சண்டிகர், கோவா, ஹிமாசல் பிரதேசம், உத்திரகாண்ட், மும்பை, சிக்கீம், பெங்கால், விதர்பா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, திரிபுரா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், அசாம், பரோடா, ஐதராபாத், உத்தர பிரதேசம் ஆகிய அணிகள் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளனர். அதன்படி மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.

    இவர்கள் இருவரும் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர் பார்ப்பு உள்ளது.

    ×