என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karate champion"

    • கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
    • ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

    இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 69-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் மத்தியப் பிரதசே மாநிலம் இந்தோர் நகரில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்த போட்டியில் கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

    இந்நிலையில், 69-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷய் ராம் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

    சாதனைப் படைடத்த கராத்தே வீரர் அக்ஷய் ராமுக்கு தலைமை பயிற்சியாளர் ஷிகான்.டி.நிர்மல்குமா் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

     

    • ஏ.வி.எஸ்.கல்லூரியில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
    • இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.

    சேலம்:

    சாய் சோட்டாகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேசன் சார்பில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஏ.வி.எஸ்.கல்லூரியில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

    இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். கலர் பெல்ட், பிளாக் பெல்ட் அடிப்படையில் போட்டி நடத்தப்படும். நுழைவு கட்டணம் தனிநபர் அளவில் பங்கேற்க ரூ.800-ம், குழுவாக கலந்து கொள்ளும் போட்டியில் ஒவ்வொரு நபரும் தலா ரூ.800-ம் செலுத்த வேண்டும். இந்த பதிவு காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை நடைபெறும். காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கி மாலை 5 மணி அளவில் முடிவடையும்.

    இப்போட்–டிக்கான ஏற்பாடுகளை சேலம் சாய் சோட்டோகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேஷன் தலைவர் ஷிகான் சங்கரன் முன்னின்று செய்து வருகிறார். இதில் உறுப்பினர்களாக அகில இந்திய காரத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு கராத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன் ஆகியவை பங்கேற்கின்றன. மேலும் விபரங்களுக்கு சேலம் சாய் சோட்டோகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேஷனை தொடர்பு கொள்ளுமாறு அதன் தலைவர் ஷிகான் சங்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×