என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடைசி நாள் ஆட்டம் நடக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது - விராட்கோலி
புதுடெல்லி:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது.
நேற்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது. மழையால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனதாக கருதப்படுகிறது.
இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 157 ரன் தேவை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டதாகும். இதனால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது.
கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “கடைசி நாளில் போட்டி நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நடக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது. இந்த டெஸ்டில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததை அறிவோம். நிச்சயம் எங்கள் கைதான் ஓங்கி இருந்தது” என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்