என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எவ்வளவு தைரியம் உங்களுக்கு?: உலகத் தலைவர்களை நோக்கி கேட்ட சிறுமிக்கு ரோகித் சர்மா பாராட்டு
Byமாலை மலர்25 Sep 2019 12:02 PM GMT (Updated: 25 Sep 2019 12:02 PM GMT)
ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து எவ்வளவு தைரியம் உங்களுக்கு? எனக்கேட்ட சிறுமிக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற கிரேட்டா தன்பெர்க் என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பேசுகையில் ‘‘இது எல்லாம் தவறு. நான் இங்கு இருக்கக் கூடாது. இந்த பெருங்கடலின் மறுபக்கத்தில் இருக்கும் ஊரில் அமைந்துள்ள பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், நீங்கள் நம்பிக்கையோடு இளைஞர்களிடம் வருகிறீர்கள். உங்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடி விட்டீர்கள்’’ என்றார்.
சிறுமியின் இந்த பேச்சு உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மாவும் பாராட்டியுள்ளார்.
ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நமது உலகத்தின் பாதுகாப்பை நம் குழந்தைகளுக்கு விட்டுச்செல்வது முற்றிலும் நியாயமற்றது. கிரேட்டா தன்பெர்க் நீங்கள் ஒரு உத்வேகம். தற்போது இந்த விவகாரத்தில் எந்த சாக்குபோக்கும் இல்லை. வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகத்தை விட்டுச் செல்ல கடமைப்பட்டுள்ளோம். தற்போது மாற்றத்திற்கான நேரம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால், நீங்கள் நம்பிக்கையோடு இளைஞர்களிடம் வருகிறீர்கள். உங்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடி விட்டீர்கள்’’ என்றார்.
சிறுமியின் இந்த பேச்சு உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மாவும் பாராட்டியுள்ளார்.
ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நமது உலகத்தின் பாதுகாப்பை நம் குழந்தைகளுக்கு விட்டுச்செல்வது முற்றிலும் நியாயமற்றது. கிரேட்டா தன்பெர்க் நீங்கள் ஒரு உத்வேகம். தற்போது இந்த விவகாரத்தில் எந்த சாக்குபோக்கும் இல்லை. வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகத்தை விட்டுச் செல்ல கடமைப்பட்டுள்ளோம். தற்போது மாற்றத்திற்கான நேரம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X