என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூன்று நாட்கள் இருப்பதால் போராடுவோம்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் சொல்கிறார்
Byமாலை மலர்6 Sep 2019 10:04 AM GMT (Updated: 6 Sep 2019 10:04 AM GMT)
ஓல்டு டிராபோர்டு டெஸ்டில ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தாலும், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடிக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மூன்று இன்னிங்ஸ் இருப்பதால் நாங்கள் இக்கட்டான நிலையில் இருந்து வெளியே வருவோம் என்று பேர்ஸ்டோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘நாங்கள் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருந்து, அதனை வெளிப்படுத்துவோம். ஸ்மித் இரட்டை சதம் அடித்த போதிலும், சில பந்துகளை மிஸ் செய்தார். இதற்கு முந்தைய தொடரில் அப்படி செய்தது கிடையாது. மற்றொரு நாளில் அவரை விரைவில் அவுட்டாக்குவோம்.
இன்னும் மூன்று இன்னிங்ஸ், மூன்று நாட்கள் உள்ளன. 3-வது நாளில் (இன்று) களத்தில் இறங்கி எங்களுடைய ஒவ்வொரு வீரர்களும் ஹெட்டிங்லேயில் பேட்டிங் செய்தது போல் நீண்ட நேரம் விளையாடினால், இக்கட்டான நிலையில் இருந்து வெளியே வருவோம்.
3-வது நாள் முதல் செசனில் நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். நான் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கவில்லை. இரண்டு நாட்கள் வானிலை மோசமாக இருக்கும் என்பதால் மாறுபட்ட ஆடுகளத்துடன் போட்டியிட வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் ஆடுகளம் எப்படி மாறுகிறது என்பதை பார்க்க வேண்டும்’’ என்றார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மூன்று இன்னிங்ஸ் இருப்பதால் நாங்கள் இக்கட்டான நிலையில் இருந்து வெளியே வருவோம் என்று பேர்ஸ்டோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘நாங்கள் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருந்து, அதனை வெளிப்படுத்துவோம். ஸ்மித் இரட்டை சதம் அடித்த போதிலும், சில பந்துகளை மிஸ் செய்தார். இதற்கு முந்தைய தொடரில் அப்படி செய்தது கிடையாது. மற்றொரு நாளில் அவரை விரைவில் அவுட்டாக்குவோம்.
இன்னும் மூன்று இன்னிங்ஸ், மூன்று நாட்கள் உள்ளன. 3-வது நாளில் (இன்று) களத்தில் இறங்கி எங்களுடைய ஒவ்வொரு வீரர்களும் ஹெட்டிங்லேயில் பேட்டிங் செய்தது போல் நீண்ட நேரம் விளையாடினால், இக்கட்டான நிலையில் இருந்து வெளியே வருவோம்.
3-வது நாள் முதல் செசனில் நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். நான் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கவில்லை. இரண்டு நாட்கள் வானிலை மோசமாக இருக்கும் என்பதால் மாறுபட்ட ஆடுகளத்துடன் போட்டியிட வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் ஆடுகளம் எப்படி மாறுகிறது என்பதை பார்க்க வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X