search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் டெண்டுல்கர்
    X
    சச்சின் டெண்டுல்கர்

    என் மனம் கவர்ந்த புகைப்படங்கள் இவைதான்.. -புகைப்பட கலைஞர்களை பாராட்டிய சச்சின்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின், தன் மனம் கவர்ந்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு புகைப்பட கலைஞர்களை பாராட்டினார்.
    புது டெல்லி:

    புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்பட கலைஞர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் உலக புகைப்பட நாள் கொண்டாடப்படுகிறது.

    லூயிஸ் டாகுவேரே, ‘டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை ‘ப்ரீ டூ தி வேர்ல்டு’ என உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இதை எடுத்துரைக்கும் வகையில் ஆகஸ்ட் 19ம்(நேற்று) தேதி, உலக புகைப்பட தினமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் புகைப்பட கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.



    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படக் கலைஞர்களை வாழ்த்தி, பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    இதில், ‘இத்தனை ஆண்டுகளில் என் வாழ்விலும், பணியிலும் மிகச்சிறப்பான தருணங்களை புகைப்படம் எடுத்த கலைஞர்களுக்கு என் உலக புகைப்பட நாள் வாழ்த்துக்கள்’ என பதிவிட்டு அவரது மனதுக்கு நெருக்கமான புகைப்படங்கள் என சிலவற்றை தொகுத்து ஒரே புகைப்படமாக பதிவிட்டிருந்தார்.

    Next Story
    ×