search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    அணியின் நலன் என்று வந்தால், சோர்வாக இருந்தால் கூட எங்கிருந்தாவது எனர்ஜி வந்துவிடும்- விராட் கோலி

    இந்திய அணியின் நலன் என்று வந்தால் சோர்வாக இருந்தால் கூட எங்கிருாந்தாவது எனர்ஜி வந்துவிடும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 120 ரன்கள் விளாசினார். தவான் மற்றும் ரோகித் சர்மா விரைவில் ஆட்டமிழந்ததால் அணியை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்ததால், நிலைத்து நின்று விளையாடினேன் என்றார்.

    மேலும், இந்திய அணி என்று வரும்போது சோர்வாக இருந்தாலும், எனர்ஜி எங்கிருந்தாவது வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘60- 65 ரன்களை எடுத்திருக்கும்போது நான்மிகவும் சோர்வடைந்தேன். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் நான் நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டியது அவசியமாக இருந்தது.

    ஆகவே, எனக்குள்ளே உத்வேகம் அடைந்து கூடுதலாக கஷ்டப்பட்டு விளையாடினேன். அணியை பற்றி நீங்கள் நினைத்தால், நீங்கள் சோர்வாக இருந்தால் கூட எங்கிருந்தாவது எனர்ஜியை பெற்று விடுவீர்கள்’’ என்றார்.
    Next Story
    ×