என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் விவகாரம்: மோதிய அப்ரிடி, கவுதம் கம்பீர்
Byமாலை மலர்6 Aug 2019 10:32 AM GMT (Updated: 6 Aug 2019 12:28 PM GMT)
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர் அப்ரிடி எழுப்பிய கேள்விக்கு இந்திய வீரரான கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
புது டெல்லி:
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை லடாக், காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில், ‘ஐநா அளித்த உறுதியின்படி காஷ்மீருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்குமானது. ஐநா ஏன் உருவாக்கப்பட்டது? இப்போது அது ஏன் தூங்குகிறது?
தூண்டப்படாத ஆக்கிரமிப்புகளும், குற்றங்களும் காஷ்மீரில் மனிதத்துக்கு எதிராக அரங்கேறுவது கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க பிரதமர் இதில் நடுநிலையாக செயல்பட வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர், ‘அப்ரிடி கண்டுபிடித்துவிட்டார். அங்கே ஆக்கிரமிப்பு எதுவும் தூண்டப்படவில்லை. இவைஅனைத்தும் குற்றச் செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கை. இதற்காக இவர் இங்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை மறந்து இவர் பேசிக் கொண்டிருக்கிறார். கவலைப்பட வேண்டாம். சீக்கிரமே தீர்வு காணப்படும் மகனே’ என பதில் அளித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை லடாக், காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநிலங்களவையிலும் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர். பாகிஸ்தானும் கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
Kashmiris must be given their due rights as per #UN resolution. The rights of Freedom like all of us. Why was @UN created & why is it sleeping? The unprovoked aggression & crimes being committed in Kashmir against #Humanity must be noted. The @POTUS must play his role to mediate
— Shahid Afridi (@SAfridiOfficial) August 5, 2019
இதில், ‘ஐநா அளித்த உறுதியின்படி காஷ்மீருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்குமானது. ஐநா ஏன் உருவாக்கப்பட்டது? இப்போது அது ஏன் தூங்குகிறது?
தூண்டப்படாத ஆக்கிரமிப்புகளும், குற்றங்களும் காஷ்மீரில் மனிதத்துக்கு எதிராக அரங்கேறுவது கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க பிரதமர் இதில் நடுநிலையாக செயல்பட வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர், ‘அப்ரிடி கண்டுபிடித்துவிட்டார். அங்கே ஆக்கிரமிப்பு எதுவும் தூண்டப்படவில்லை. இவைஅனைத்தும் குற்றச் செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கை. இதற்காக இவர் இங்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை மறந்து இவர் பேசிக் கொண்டிருக்கிறார். கவலைப்பட வேண்டாம். சீக்கிரமே தீர்வு காணப்படும் மகனே’ என பதில் அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X