search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    விராட் கோலியின் கபடி அணியில் இடம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

    புரோ கபடி போட்டியை கண்டுகளித்த விராட் கோி, இந்திய கிரிக்கெட் வீரர்களை கொண்ட கபடி அணியை தேர்வு செய்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி நேற்று நடைபெற்ற புரோ கபடி போட்டியை காணச் சென்றார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய விராட் கோலி, கபடி விளையாட அதிகமான வலிமை மற்றும் விளையாட்டுத்திறன் வேண்டும் என்றார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கபடி விளையாடுவதற்கு அதிக அளவில் வலிமை மற்றும் விளையாட்டுத்திறன் தேவை. ஆகவே, எம்எஸ் டோனி, ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு கபடி விளையாட்டிற்கு சரியான நபர்கள். உமேஷ் யாதவ் உண்மையிலேயே வலிமையானவர். ரிஷப் பந்தும் சிறந்த வீரர்.

    விராட் கோலி

    பும்ராவுக்கும் என்னுடைய அணியில் இடம் உண்டு. ஏனென்றால் அவர் கால் விரல்களை தரையில் பலமான ஊன்றக்கூடிய திறமைப் படைத்தவர். அதற்காக கடும் பயிற்சி எடுக்கக்கூடியவர். எனக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை. அவர்கள் என்னைவிட வலிமையானவர்கள் மற்றும் விளையாட்டுத் திறன் கொண்டவர்கள். கடைசியாக கேஎல் ராகுல். இதுதான் என்னுடைய 7 பேர் கொண்ட கபடி அணி’’ என்றார்.
    Next Story
    ×