என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
38-வது பிறந்த நாள்: டோனிக்கு ஐ.சி.சி. புகழாரம்
Byமாலை மலர்7 July 2019 10:23 AM GMT (Updated: 7 July 2019 10:23 AM GMT)
38-வது பிறந்த நாள் டோனிக்கு ஐ.சி.சி. புகழாரம் ‘இந்திய கிரிக்கெட்டின் வடிவமைப்பை மாற்றியவர்’
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திழ்ந்த எம்எஸ் டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளது எம்எஸ் டோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி. தற்போது ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்து பெருமை சேர்த்தவர். அவரது தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வென்றது.
இதுபோல் ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது. கடைசி கட்டத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவர் என்ற பெருமையை பெற்றவர். நட்சத்திர வீரரான டோனிக்கு 38-வது பிறந்த நாள் ஆகும். இதையடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், ‘‘இந்திய கிரிக்கெட்டின் வடிவமைப்பை மாற்றிய பெயர் மறுக்க முடியாத மரபு கொண்ட பெயர் எம்.எஸ்.டோனி. இது வெறும் பெயரல்ல’’ என்று தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, ‘‘டோனி எப்போதும் அமைதியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். அவரிடம் இருந்து சுற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் என்னுடைய கேப்டன். டோனி எப்போதும் என் கேப்டனாக இருப்பார். எங்கள் புரிதல் எப்போதும் புத்திசாலித்தனமானது. அவரது ஆலோசனையை நான் எப்போதும் கேட்பேன்’’ என்றார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரும் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி. தற்போது ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்து பெருமை சேர்த்தவர். அவரது தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வென்றது.
இதுபோல் ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது. கடைசி கட்டத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவர் என்ற பெருமையை பெற்றவர். நட்சத்திர வீரரான டோனிக்கு 38-வது பிறந்த நாள் ஆகும். இதையடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், ‘‘இந்திய கிரிக்கெட்டின் வடிவமைப்பை மாற்றிய பெயர் மறுக்க முடியாத மரபு கொண்ட பெயர் எம்.எஸ்.டோனி. இது வெறும் பெயரல்ல’’ என்று தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, ‘‘டோனி எப்போதும் அமைதியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். அவரிடம் இருந்து சுற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் என்னுடைய கேப்டன். டோனி எப்போதும் என் கேப்டனாக இருப்பார். எங்கள் புரிதல் எப்போதும் புத்திசாலித்தனமானது. அவரது ஆலோசனையை நான் எப்போதும் கேட்பேன்’’ என்றார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரும் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X