என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெய்மரை பற்றி பேசுகையில், கவுட்டினோ நிரூபித்துக் கொண்டிருக்கிறார்- ரொபேர்டோ
Byமாலை மலர்25 Jun 2018 12:00 PM GMT (Updated: 25 Jun 2018 12:00 PM GMT)
எல்லோரும் நெய்மரை பற்றி பேசுகையில், பிலிப்பே கவுட்டினோ நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என ரொபேர்டோ கார்லஸ் தெரிவித்துள்ளார். #WolrdCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிகள் ஒன்றாக பிரேசில் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நெய்மர், பிலிப்பே கவுட்டினோ, கேப்ரியல் ஜீசஸ், மார்சிலோ போன்ற வீரர்கள்தான்.
நெய்மர் காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரால் உலகக்கோப்பையில் விளையாட முடியுமா? என்ற நிலை இருந்தனர். ஆனால் உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார்.
நெய்மர் விளையாடினால்தான் பிரேசில் அணி வெற்றி பெறும் என்று அனைவரும் கணித்தார்கள். பிரேசில் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இந்த போட்டியில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் பிலிப்பே கவுட்டினோதான் கோல் அடித்தார்.
அதேபோல் கோஸ்டா ரிகாவிற்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றது. இதில் முதல் கோலை கவுட்டினோதான் அடித்தார். அனைவரும் நெய்மரை பற்றி பேசுகையில் பிலிப்பே கவுட்டினோ தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் பிரேசில் வீரர் ரொபெர்டோ கார்லஸ் தெரிவித்துள்ளார்.
2002-ம் ஆண்டு உலகக்கோப்பையை பிரேசில் வெல்லும்போது அந்த அணியில் இடம்பிடித்திருந்தவர் கார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கார்லஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் நெய்மரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரேசில் அணிக்கான சிறப்பான வீரர் என்பதை கவுட்டினோ நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அனைத்து தடுப்பாட்டக்காரர்களும் நெய்மர் மீது கவனம் செலுத்தும்போது, கவுட்டினோ மேலெழுந்து, போட்டியை முடிவு செய்கிறார்’’ என்றார்.
நெய்மர் காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரால் உலகக்கோப்பையில் விளையாட முடியுமா? என்ற நிலை இருந்தனர். ஆனால் உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார்.
நெய்மர் விளையாடினால்தான் பிரேசில் அணி வெற்றி பெறும் என்று அனைவரும் கணித்தார்கள். பிரேசில் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இந்த போட்டியில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் பிலிப்பே கவுட்டினோதான் கோல் அடித்தார்.
அதேபோல் கோஸ்டா ரிகாவிற்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றது. இதில் முதல் கோலை கவுட்டினோதான் அடித்தார். அனைவரும் நெய்மரை பற்றி பேசுகையில் பிலிப்பே கவுட்டினோ தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் பிரேசில் வீரர் ரொபெர்டோ கார்லஸ் தெரிவித்துள்ளார்.
2002-ம் ஆண்டு உலகக்கோப்பையை பிரேசில் வெல்லும்போது அந்த அணியில் இடம்பிடித்திருந்தவர் கார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கார்லஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் நெய்மரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரேசில் அணிக்கான சிறப்பான வீரர் என்பதை கவுட்டினோ நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அனைத்து தடுப்பாட்டக்காரர்களும் நெய்மர் மீது கவனம் செலுத்தும்போது, கவுட்டினோ மேலெழுந்து, போட்டியை முடிவு செய்கிறார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X