என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்சினாட்டி ஓபன்: காலிறுதியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி
Byமாலை மலர்19 Aug 2017 6:23 PM GMT (Updated: 19 Aug 2017 6:23 PM GMT)
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
நியூயார்க்:
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று (19-ம் தேதி) நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் முதல்நிலை வீரரான ரபேல் நடால், 22 வயதான ஆஸ்திரேலியாவின் நிக் கிரைகோஸை எதிர்கொண்டார்.
நிக் கிரைகோஸ் முந்தைய போட்டியில் மூன்றாம் நிலை வீரர் டோம்னிக் தெய்மை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.
சென்ற போட்டியைப் போல இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடிய கிரைகோஸ் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார். கிரைகோஸ் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் பெரரை எதிர்கொள்ள இருக்கிறார்.
இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் நான்காம் நிலை வீராங்கனையான முகுருஷா, முதல்நிலை வீராங்கனையான பில்ஸ்கோவாவை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X