search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக ஜான்டி ரோட்ஸ் நியமனம்
    X

    திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக ஜான்டி ரோட்ஸ் நியமனம்

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இணைகிறார். அவர் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராவும், டி.என்.பி.எல். போட்டியின் தூதராகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி அணியினருடன் இரண்டு நாட்கள் தங்கி இருப்பார். இது குறித்து திருச்சி அணியின் பயிற்சியாளர் டினு யோகனன் கூறுகையில், ‘ஜான்டி ரோட்ஸ் போன்ற ஜாம்பவான்களால் வீரர்களுக்கு உத்வேகம் கொடுக்க முடியும். அவரது வருகையால் பரவசமடைகிறேன். அவரது அனுபவமும், ஆலோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார். 
    Next Story
    ×