search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி குழும முறைகேடு - ஏன் அமைதியா இருக்கீங்க - பிரதமருக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி?
    X

    அதானி குழும முறைகேடு - ஏன் அமைதியா இருக்கீங்க - பிரதமருக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி?

    • இந்தியாவின் உள்கட்டமைப்பு விவகராத்தில் விளையாட வெளிநாட்டவருக்கு ஏன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • அதானி குழுமம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று செபி தெரிவித்தது.

    மும்பையில் இன்று நடைபெற்ற ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி ஆலோசணைக் கூட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதானி குழுமம் சார்ந்து ஒ.சி.சி.ஆர்.பி. வெளியிட்ட அறிக்கை குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பினார். இது குறித்து அவர் பேசியதாவது..,

    "ஒ.சி.சி.ஆர்.பி. அறிக்கை குறித்து ஏராளமான கேள்விகள் உள்ளன. முதலில், இது யாருடைய பணம்? இது அதானியுடையதா? அல்லது வேறு யாருடையதாவதா? இதில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் மற்றும் இரண்டு வெளிநாட்டு நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இரண்டாவது கேள்வி, இந்தியாவின் உள்கட்டமைப்பு விவகாரத்தில் புகுந்து விளையாட இந்த இரு வெளிநாட்டவருக்கு ஏன் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது?"

    "இந்த விவகாரம் தொடர்பாக செபி விசாரணை நடத்தியது. அதில் அதானி குழுமம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று செபி தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை கொடுத்த நபர் தான் தற்போது என்.டி.டி.வி. இயக்குனராக இருக்கிறார். இந்தியாவுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை வாங்குவதற்கு வெளிநாட்டு பணத்தை திணிக்கும் நிர்வாக கூட்டமைப்பு செயல்படுவதாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஏன் இந்த விஷயம் தொடர்பாக அமைதி காக்கிறார்? ஏன் இது பிரச்சினையாக பார்க்கப்படவில்லை? சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற நிறுவனங்கள் ஏன் இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்ய முன்வரவில்லை?"

    "இந்த விவகாரம் இந்தியாவின் நற்பெயரை பாதிப்படைய செய்கிறது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்கு கூட்டு பாராளுமன்ற குழு ஒன்றை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும். பல பில்லியன் டாலர்கள் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுகிறது என்பதை அனைத்து நாடுகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இது நாட்டின் நற்பெயரை சேதப்படுத்தி வருகிறது."

    "அதானி குழுமம் தொடர்பான விசாரணை நடத்திய நபர் தற்போது அந்த குழுமத்தின் ஊழியராகி இருப்பது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுகிறது. ஜி20 உச்சி மாநாட்டை உலக மக்கள் தொகை பார்த்துக் கொண்டு இருக்கிறது. செபி சார்பில் அதானி குழுமம் மீது விசாரணை நடத்திய நபர், தற்போது அதானி நிறுவனத்தில் ஊழியராக இருக்கிறார். இதன் மூலம் விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிகிறது. இதில் இருந்தே பிரதமருக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று தெரிகிறது," என ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×