search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொலையில் முடிந்த பீடி தகராறு- டெல்லியில் பயங்கரம்
    X

    கொலையில் முடிந்த பீடி தகராறு- டெல்லியில் பயங்கரம்

    • கொலை சம்பவம் தொடர்பாக 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • தாக்குதலை தடுக்க வந்த மிஸ்ராவின் நண்பருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி ஷஹபாத் பால் பண்ணை பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துணை ஆணையாளர் ரவி குமார் சிங் தலைமையிலான போலீசார், அந்த உடலை கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் சஞ்சய் மிஸ்ரா (வயது 35) என்பதும், பீடி தகராறில் கொலை நடந்ததும் தெரியவந்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    மகாதேவ் சௌக் அருகே உள்ள காலி பகுதி வழியாக சஞ்சய் மிஸ்ரா தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்யவான் என்பவர் மிஸ்ராவிடம் பீடி கேட்டுள்ளார். இதற்கு மிஸ்ராவும், அவரது நண்பரும் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யவான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிஸ்ராவின் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த மிஸ்ராவின் நண்பருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உடலில் பல இடங்களில் காயம் அடைந்த சஞ்சய் மிஸ்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    Next Story
    ×