search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி- 8 பேர் படுகாயம்
    X

    கர்நாடகாவில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி- 8 பேர் படுகாயம்

    • ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கதவல் வெளியாகியுள்ளது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மாநிலம் கோகாக் தாலுகாவில் உள்ள அக்டங்கியரா ஹலா கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்களை சரக்கு வாகனத்தில் பெலகாவிக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, பெலகாவியில் உள்ள கனபரகி கிராமத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பல்லாரி நாலா என்கிற பகுதியில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×