என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கர்நாடகாவில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி- 8 பேர் படுகாயம்
Byமாலை மலர்26 Jun 2022 8:25 AM GMT (Updated: 26 Jun 2022 5:14 PM GMT)
- ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கதவல் வெளியாகியுள்ளது.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் கோகாக் தாலுகாவில் உள்ள அக்டங்கியரா ஹலா கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்களை சரக்கு வாகனத்தில் பெலகாவிக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, பெலகாவியில் உள்ள கனபரகி கிராமத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பல்லாரி நாலா என்கிற பகுதியில் கவிழந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X