search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு பள்ளி பஸ்சுக்குள் பதுங்கிய மலைப்பாம்பு
    X

    ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு பள்ளி பஸ்சுக்குள் பதுங்கிய மலைப்பாம்பு

    • பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வரும் பஸ், நேற்று விடுமுறை என்பதால், அப்பகுதியில் உள்ள கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
    • ஆட்டு குட்டி ஒன்றை முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு பஸ்சின் என்ஜின் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வரும் பஸ், நேற்று விடுமுறை என்பதால், அப்பகுதியில் உள்ள கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது பஸ்சின் அருகே சென்ற கிராம மக்கள் பஸ்சுக்குள் ஒரு மலைப்பாம்பு கிடப்பதை கண்டனர். உடனே அவர்கள் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பள்ளி நிர்வாகிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஆட்டு குட்டி ஒன்றை முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு பஸ்சின் என்ஜின் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டனர்.

    வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இந்த காட்சிகளை அந்த பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×