என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு பள்ளி பஸ்சுக்குள் பதுங்கிய மலைப்பாம்பு
- பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வரும் பஸ், நேற்று விடுமுறை என்பதால், அப்பகுதியில் உள்ள கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
- ஆட்டு குட்டி ஒன்றை முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு பஸ்சின் என்ஜின் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வரும் பஸ், நேற்று விடுமுறை என்பதால், அப்பகுதியில் உள்ள கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது பஸ்சின் அருகே சென்ற கிராம மக்கள் பஸ்சுக்குள் ஒரு மலைப்பாம்பு கிடப்பதை கண்டனர். உடனே அவர்கள் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே பள்ளி நிர்வாகிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஆட்டு குட்டி ஒன்றை முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு பஸ்சின் என்ஜின் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டனர்.
வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இந்த காட்சிகளை அந்த பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்