search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தீபாவளி பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
    X

    தீபாவளி பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

    • நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியி, தீபாவளியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இருளின் மீது ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அநீதியின் மீது நீதியையும் வென்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கருணை, நேர்மறை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும். தீபாவளி பண்டிகை நம் மனசாட்சியை ஒளிரச் செய்து, மனிதகுலத்தின் நலனுக்காக உழைக்கத் தூண்டுகிறது. ஒரு தீபம் பலவற்றை ஒளிரச் செய்யும். அதேபோல ஏழை, எளியோரின் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரலாம்.

    தீபத் திருவிழாவை நாம் அனைவரும் பாதுகாப்பாக கொண்டாடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்ப உறுதிமொழி எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தப் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×