search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தீபாவளியையொட்டி உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தீபாவளியையொட்டி உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

    • நாம் அனைவரும் ஒன்றிணைந்து, சுயசார்பு பாரதம் என்ற நமது கனவை நிறைவேற்றுவோம்.
    • வாங்கும் பொருட்களுக்கான தொகையை செலுத்த யு.பி.ஐ. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    நாடு தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அதில், 'இந்த பண்டிகையின்போது மக்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, சுயசார்பு பாரதம் என்ற நமது கனவை நிறைவேற்றுவோம்.

    வாங்கும் பொருட்களுக்கான தொகையை செலுத்த யு.பி.ஐ. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையையும் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    மேலும், உள்ளூர் தயாரிப்புகள் அல்லது கைவினைஞர்களுடன், இந்தியாவில் தயாரித்த ஸ்மார்ட்போனில் எடுத்த 'செல்பி'யை 'நமோ ஆப்'பில் மக்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

    அந்த படங்களில் சிலவற்றை நான் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வேன். அது, 'வோக்கல் பார் லோக்கல்' என்ற உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கத்துக்கு ஊக்கம் கொடுக்கும். இந்த இயக்கம் தற்போது நாடு முழுவதும் நல்ல வேகம் பெற்றுவருகிறது.'

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×