ஆம் ஆத்மி மந்திரி திடீர் ராஜினாமா: உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகல்

ஊழலை எதிர்த்துப் போராட பிறந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலில் சிக்கித் தவிக்கிறது.இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார் என தெரிவித்தார்.
ஆம் ஆத்மி மந்திரி திடீர் ராஜினாமா: உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகல்
Published on

புதுடெல்லி:

டெல்லி சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மேலும் அவர் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்நிலையில், ராஜ்குமார் ஆனந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட பிறந்தது. ஆனால் இன்று அந்தக் கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது.

அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. இந்த ஊழலுடன் பெயரை இணைக்கமுடியாது என்பதால் அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன்.

இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார். எனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்.

தலித் பிரதிநிதித்துவம் பற்றி பேசப்படும்போது பின் இருக்கை எடுக்கும் கட்சியில் நான் அங்கம் வகிக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com